Saturday, May 29, 2010

பிரிவாற்றாமை குறள் - ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி :)

ஒரே ஒரு குறளை மொழிபெயர்க்க முயற்சி செய்து விட்டு இந்த தலைப்பு கொஞ்சம் அதிகம் தான் :)

அந்த குறள் -

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

- என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!

இதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழ் அறியாத நண்பர்களும் படித்து புரிந்துகொள்ள கீழ்க்காணும் ஆங்கில ஆக்கம் கொடுக்கப்பட்டது :)

Awaiting Originally uploaded by Karthick Makka

Not wanting to show my world
the bewildering grief
the loneliness of my soul
the deterioration of my Mind and body -
Yet my bangle drops away
Spreading out your absence..
The never ending wait taunts
Awaiting for you..


யதேச்சையாக ஒரு நாள் ‘miss you'வில் வரும் மிஸ் என்ற வார்த்தைக்கு இணையான ஒரு தமிழ்ச்சொல் என்னவாக இருக்கும் என்று பேச்சு வந்தது...
‘பிரிவாற்றாமை’ சரியாக இருக்குமோ என யோசித்துவிட்டு கூகுளிட்டு பார்க்கும் போது திருக்குறளின் ‘பிரிவாற்றாமை’ அதிகாரத்தைக் கடந்து வர நேரிட்டது.. எப்போதோ படித்த நினைவுகள் மங்கலாக.. இருந்தும் இப்போது படித்த போது மயக்குவதாய் இருந்தது...

சொல்லிவைத்தது போல, நண்பர் ஒருவர் இக்குறளை தன் புகைப்படத்திற்கான வரிகளாய் சில நாட்களுக்கு முன் வலையில் ஏற்றியிருந்தார். அருமையான புகைப்படமும் அதற்கேற்ற வரிகளுமாய் அமைந்திருந்தது அது.. அதைப்பார்த்த மற்ற தமிழ் தெரியாத நண்பர்கள் சிலர் அவ்வரிகளைப் பற்றி கேட்க, ஆங்கிலத்தில் அதன் சாராம்சத்தை கொடுக்கலாமே என எண்ணி முயற்சி செய்தது தான் இது!

பி.கு : ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்/சுட்டிகாட்டவும் :)

14 comments:

தம்பி... said...

நன்றி பையா..
அருமையான மொழிப்பொயர்ப்பு...

அந்த படத்தின் அழம் மக்களை சென்றடைய மிகவும் பயனுள்ளதாக இருந்தது...

அ.முத்து பிரகாஷ் said...

மிகவும் ரசித்தேன் அன்பு பையா...
அனைத்து இன்பத்து குறள்களுக்கும் நீங்க எழுதினா நாங்க கொடுத்து வச்சவங்க ...
// அந்த படத்தின் அழம் மக்களை சென்றடைய மிகவும் பயனுள்ளதாக இருந்தது... //
அப்படி தோணல தோழர் ... அந்த பொண்ணுகிட்ட தெரியிறது பிரிவாற்றாமையா? காத்திருத்தலின் சந்தோசமா ?
நன்றி தோழர்களே !

ரோகிணிசிவா said...

குட் முயற்சி ., படம் அருமை .,

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை .....

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

நல்ல முயற்சி.. வாழ்த்துகள்..

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

ஆங்கில மொழிபெயர்ப்பு என்பது நேரடியான முறையிலேயே அறியப்பட்டுள்ளது. அவைகள் பல நேரங்களில் மிகவும் வறட்சியாகவும் அமைந்து விடுவதுமுண்டு. இங்கு அந்தக் குறள் நன்கு உள் வாங்கப்பட்டு கொடுத்திருப்பது இன்னும் கூடுதல் ஆழத்தைக் கொடுக்கிறது... தொடர்ந்து முயலுங்களேன்.

குட்டிப்பையா|Kutipaiya said...

@ தம்பி - அந்த படம் தான் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது...மிக்க நன்றி :) :)

@நியோ - ரசிப்பிற்கு மிகுந்த நன்றிகள்..
தம்பி சொல்ல வருவது - தமிழ் தெரியாமல் அந்த படத்திற்கு கொடுத்திருந்த வரிகளை புரிந்துகொள்ள முடியாமல் இருந்த நண்பர்களுக்கு இது பயனுள்ளதாய் இருந்தது என்பதே..
மற்றபடி, பிரிவாற்றாமையும் காத்திருத்தலின் சந்தோஷமும் ஒன்றுக்குள் ஒன்று தானே? :) :)

குட்டிப்பையா|Kutipaiya said...

@ரோகிணி - நன்றி வருகைக்கும் ரசிப்பிற்கும் :)

உலவு - மிக்க நன்றி..

குட்டிப்பையா|Kutipaiya said...

@ ரிஷபன் - நன்றி :)

@ தெக்கி - நன்றி - தொடர்ந்து பண்ணிடலாம் :)

theluck said...

நல்ல வார்த்தைகள் நல்ல கோர்வை. அருமையான முயற்சி.

பத்மா said...

கைவளை ன்னு எழுதி இருக்கறத பார்த்தவுடன் எனக்கு இதுவும் தோன்றியது ..

மாறாக் காதலர் மனை மறந்தனனே
ஆறாகட் பனி வரலானாவே
ஏறா மென் தோள் வளை நெகிழ்ந்ததுவே
கூறாய் தோழி யான் வாழுமாறே

R. Gopi said...

taunts என்பதற்குப் பதில் daunts போட்டிருக்கலாமோ? ஏதோ உங்க புண்ணியத்துல நானும் கொஞ்சம் ஆங்கிலம் கத்துக்கிறேன்.

மத்தபடி சூப்பர். பத்மாவோட பின்னூட்டம் நல்லா இருக்கு.

இன் பாக்ட் இந்த மாதிரி எழுதும்போது வேற பிரிவாற்றாமை சம்பந்தமான விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சங்க காலப் பாடலாகத் தான் இருக்கணும்னு தேவையில்லை. சினிமாப் பாட்டாகவும் இருக்கலாம். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா மாதிரி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குங்க ..

Post a Comment

Related Posts with Thumbnails