tag:blogger.com,1999:blog-44238096682566790702024-03-18T22:06:47.146-07:00குட்டிப்பையாகுட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-2742694466933507362018-10-13T01:09:00.000-07:002018-10-23T01:10:27.089-07:00Guess whatஇவ்வருட தொடக்கத்தில் (டிசம்பரில் முடிக்க முடியாத காரணத்தால்) சீக்ரட் சான்டா விளையாடிக்கொன்டிருந்தோம். வித்தியாசம் என்னவென்றால், விளையாடுவோர் அனைவரும் வேறு வேறு ஊர்கள், நாடுகளில். Long Distance Relationship போல, ஒரு Long Distance சான்டா. இதற்கென உள்ள ஒரு தளத்தில் அனைவரும் பதிவு செய்தவுடன், நமக்கென ஒதுக்கப்பட்ட சைல்ட் தெரிந்துவிடும். அதன் பின் உங்கள் வேண்டுகோள்கள், தகவல்கள் உங்கள் அடையாளம் அறியாதவாறு பகிர்ந்துகொள்ள முடியும். அதகளமாக சென்றுகொண்டிருந்தது விளையாட்டு. Dubsmash, விடியோ, புகைபடங்கள் என தினமும் கொண்டாட்டம்.. அவ்வாறாக ஒரு நாள் எனக்கொரு வேண்டுகோள் வந்தது. தாய்மை பற்றியான பதிவோ கவிதையோ பேஸ்புக்கில் பகிரவேண்டுமென. நேரமின்மை காரணமாக, ஒரு சின்ன ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டேன். ("முகவாயை கைகளால் உயர்த்தி, கண்ணோடு கண் நோக்கி "செல்ல்ல்ல்லக்க்குட்ட்டீஈஈ!!" என அழைக்கிறான் அன்பு மகன். உச்சி முகர்ந்து, கட்டி அணைத்து, கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு, உதட்டிலும் அழுத்தமாக முத்திரை பதிப்பவன் ;) .'தங்கபேபி..','பேபிக்குட்டி மாம்மி..','தங்ககட்டி..' என என்னை கொஞ்சிக்கொண்டிருக்கும் இவன் நான் பெற்று வளர்க்கும் மகன் தானா, அல்லது என்னை தன் அம்மாவென அள்ளிக்கொஞ்சி தாலாட்டி சீராட்டி கொண்டாடிய என் அப்பனா "?)<br />
<br />
அடுத்த நாள் அதற்கான பதில் வந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பேருந்தில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தேன். அருமையான பதிவு என்றும் ரசித்ததாகவும் சொல்லிய எனது சான்டா, "உனக்கு அப்பாவின் நினைவு வந்திருக்கும். அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறாய் அல்லவா ? ஒரு கற்பனை போன் கால் ஒன்று செய்து ஷேர் செய்யேன், அவரிடம் இப்போது என்ன சொல்வாய் ? Hope it is not too heavy." என கேட்டிருந்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே தொண்டையை அடைத்தது. ஜன்னலை திறந்து வைத்தேன். காற்றுப்பட்டது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. மறுமுறை அதை படித்தேன். கடகட வென கண்ணீர் துளிகள் உருண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக நான் என்னை கொஞ்சம் மனவலிமையான ஆளாக கருதிக்கொள்வதுண்டு. சட்டென அழுகை, அதுவும் பொதுவெளியில் மிகவும் கடினம் தான். இருபது வருடமாகிவிட்டதே, பழகிவிட்டது என நினைத்திருந்தேனே. ஆனால் இன்று, எது என்னை இப்படி அழ வைக்கிறது ?<br />
<br />
யோசிக்கிறேன். என்ன பேசுவேன் அப்பாவிடம்? என்னவென்று அவ்வுரையாடலை ஆரம்பிக்க? நல்லா இருக்கீங்களா அப்பா என்றா ? இருபது வருடங்களின் கதையை, கண்ணீரை, வலியை, வெற்றிகளை, சந்தோஷங்களை, என்னவென்று மொழிபெயர்ப்பேன் ? ஒரு உறுதுணை, ஒரு தூண், கை பிடிக்கும் விரல், சாய்ந்து கொள்ளும் தோள், அழுகை அமர்த்தும் மடி - வேண்டிய பொழுதுகளில் அவை இல்லாமல் இருந்த வெறுமையை எப்படி சொல்வேன்? நினைக்க நினைக்க நிற்காமல் ஒடும் கண்ணீரை மீறி என்ன பேசிவிட முடியும் என்னால் ? இல்லை, இது என்னால் முடியாது. இதை செய்ய என்னால் முடியாது. அப்பா திரும்பி வரப்போவதேயில்லை என்பதானாலேயே என்னால் முடியாது. மன்னித்து விடு சான்டா என பதில் அனுப்பிவிட்டு தொடர்ந்து யோசித்து கொண்டிருந்தேன்.<br />
<br />
காயத்தை காலம் ஆற்றிவிட்டதென நினைத்ததை, மனதை அறுப்பதாக அல்லாமால், இயல்பான ஒரு கவலையாக மனதின் அடியில் படிந்துவிட்டதை, ஒரு வார்த்தை, ஒரு கற்பனை, அன்று இருந்தது போலவே அவ்வலியை திருப்பி கொண்டுவர முடியுமா ? இங்கே அழுது கொண்டிருப்பது இப்பொது இருக்கும் நானல்ல, அன்றிருந்த பதினான்கு வயது சிறுமி அல்லவா? ஒரு காயம் என்றும் மறைவதில்லை. உறுத்தாமல் ஓரமாக இருக்க பழகிக்கொண்டிருக்கும். மேலே ஆறியது என நீங்கள் நினைத்தாலும் எத்தனை வருடங்களுக்கு பிறகும் கொஞ்சம் தட்டிப்பார்த்தால், அதே ரத்தமும் சதையுமான காயம்.தான். எக்காயத்தையும் காலம் ஆற்றும் என்பது உண்மை அல்ல. பழக்கப்படுத்தும் என்பதே உண்மை. ஒரு இழப்பின் வலி என்றும் மறைவதேயில்லை<br />
<div>
<br /></div>
குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-29307386409982506332012-10-29T11:00:00.000-07:002012-10-29T11:00:29.645-07:00The PITSTOP... [2]<br />
<div mce_style="text-align: center;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: center;">
[<a href="http://kutipaiya.blogspot.in/2012/08/the-pitstop.html" target="_blank">1</a>] [2]</div>
<div mce_style="text-align: center;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: center;">
<br /></div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
பயணங்கள் பற்றிய பழைய நினைவுகளை எல்லாம் ஒட்டிப் பார்த்ததில் முக்கால்வாசிக்கும் மேலாக வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு மூலையில் உம்மணாம்மூஞ்சியோடு ஒரமாக உட்கார்ந்திருப்பதே படத்தின் இன்டர்வெல் வரை ஓடியது. அதற்கு மேல் எனக்கே தாங்காமல் இன்னும் கொஞ்சம் ரீவைண்ட் செய்ததில் ஒரு 5-6 வயது இருக்கும் போது நடந்த ஒன்று நினைவுக்கு வந்தது. அதற்கான அர்த்தங்களை நான் இதுவரை புரிந்து கொள்ள விழைந்ததே இல்லை. இப்போது நினைக்கும் போது நிஜமாகவே விசித்திரமாக இருந்தது. அப்போது என் பள்ளிக்கு மிக அருகில் ஒரு பெரிய பழைய கால தேவாலயம் ஒன்று இருந்தது. அது எங்கள் பள்ளியை விட பெரிதாகவும் செடி கொடிகளுடன் மண் சாலைகளுடன் அங்கங்கே தனித்தனி பிரார்த்தனை கூடங்களும் பாதிரியார்கள் தங்கும் விடுதிகளும் கொண்ட விசாலமான வளாகம். பள்ளியும் வீடும் மிக அருகில் தான். 5 நிமிட நடை. என்னை பள்ளியிலிருந்து அழைத்து செல்ல என்னைப் பார்த்துக்கொள்ளவும் வீட்டு வேலைகளில் உதவவும் வைத்திருந்த சிவகாமி அக்கா தான் வருவார். எப்போதாவது விடுமுறையிலோ பெர்மிஷனிலோ இருக்கும் போது அம்மாவும் உடன் வருவார். அப்போதெல்லாம் நாங்கள் அந்த வளாகத்திற்கு சென்று வருவோம். அது தான் எனக்கு தெரிந்த முதல் அவுட்டிங் ஸ்பாட். வழியும் தெரிந்த என்று சொல்வது தான் இன்னும் பொருத்தம்.</div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
<br /></div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
ஒரு நாளில் பள்ளி விட்டு வீட்டுக்கு செல்லும் போது எனக்கு அந்த எண்ணம் உதித்தது. அந்த வளாகத்திற்குத் தனியாக செல்ல வேண்டுமென. பள்ளியில் இருந்து செல்வது தான் எளிது. எனினும் அக்கா தயாராக நிற்பார். என்றாவது பார்த்துக்கொள்ளலாமென தள்ளி வைக்கவெல்லாம் தோன்றவே இல்லை. ஒன்றே செய் பாணியில் அன்றே அதை செயல்படுத்தியாக வேண்டுமென ஒரு வேகம். வீட்டிற்குச் சென்று உடை மாற்றிவிட்டு எப்போதும் போல பக்கத்துவீட்டில் சென்று விளையாடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். மிஞ்சிப்போனால் இரண்டடி உயரம். அதற்கு ஒரு பாவாடைச் சட்டை. ஒரு குடுமி. இந்த உருவத்தை வைத்துக் கொண்டு வெறுங்கையுடன் தெருவில் இறங்கி நடந்தேன். வேகவேகமாக நடந்தும் வழி நீண்டு கொண்டேயிருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, கொஞ்சம் பயம், கொஞ்சம் ஆர்வம் என கலவையான உணர்வு. ஒரு வழியாக இன்னும் சிறிது தூரம் தான் என்னுமிடத்தில் ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த திரும்பி பார்த்தேன். புன்னகைத்துக் கொண்டே அக்கா என் பின்னேயே வந்து கொண்டிருக்கிறார்.</div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
<br /></div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
பின்னே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நான் அங்கே தான் விளையாடிக்கொண்டிருப்பேன் எனவும் என்னைத் தேடவேண்டாமெனவும் திரும்ப திரும்ப உளறியிருக்கிறேன். பின்னாலேயே வந்து என்னைப் பிடித்துவிட்டார். அவர் என்ன கேட்டார் நான் என்ன பதில் சொன்னேன் என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் அவர் வீட்டில் என்னை மாட்டிவிடவில்லை. ஏனென்றால் அதற்காக அடி வாங்கியதாய் ரெக்கார்டில் இல்லை! உண்மையாகவே இத்தனை வருடங்கள் கழித்து அது நினைவுக்கு வந்ததும் அது குறித்த இப்போதைய எனது பார்வையும் தான் கொஞ்சம் ஆச்சரியமானது தான். அப்போதிருந்த மனநிலை என்னவென்று அறிய முடியவில்லை எனினும் எனக்கு சில கேள்விகள் எழுந்தன. என்னை செலுத்தியது என்ன ? எனக்கென ஒரு அனுபவம், சுதந்திரம் தேவைப்பட்டதா? யாரையும் சார்ந்து நிற்காமல் வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ளத் தோன்றியதா ? இப்போது என்னிடம் பதில் இல்லை!</div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
<br /></div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
சில மாதங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தைப் படித்தேன். ப்ரான்ஸ்'ல் இருந்து ஜெனிவா ஏரி வரை (தனியாக) நடைபயணம் மேற்கொள்ளும் ஒரு பெண்ணின் பயணக்கட்டுரை. அங்கே பக்காவாக இதற்கான பயண கையேடுகள், வழிகளில் இவ்வாறு பயணிப்பவர்கள் தங்க விடுதிகள் என எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. படித்தவுடன் அப்படியே கற்பனை சிறகடித்து பறந்தது. அந்த கிராமங்களும் மக்களும் மலைகளும் காடுகளும் அதன் அழகும். ஆகா. என்ன ஒரு அனுபவம் ? நம்மால் இங்கே என்ன செய்ய முடியும் ? திருப்பதி மலை, திருவண்ணாமலைகளில் நடை பயணிகளுக்கான ஏற்பாடுகள் உண்டு. அங்கே செல்வதில் பெரிதான ஆர்வமில்லை! எஸ் ரா ஒரு முறை டவுன் பஸ்களிலேயே மாறி மாறி அவர் ஊருக்கு சென்றது போல, மதுரைக்கு நடந்தால் என்ன ? நெடுஞ்சாலைகள் ஆரம்பித்தவுடன் சூழும் வெறுமையும் இருளும் பயமுறுத்தியது. நடைபாதையில் தூங்க முடியுமா ? பாதுகாப்பு ? உணவு? என அடுக்கடுக்காக வழக்கம் போல ஆகாததைப் போட்டு மேலும் குழப்பினேன். இங்கே அதற்கெல்லாம் வழி இல்லை என கடைசியில் எண்ணம் கைவிடப்பட்டது. குட்டி குட்டி நடைப்பயணங்கள் மேற்கொள்ளலாம் என அதற்கு சமாதானமும் சொல்லிக் கொள்ளப்பட்டது. ஒரு வாரவிடுமுறையில் பரிசோதனை முயற்சியாய் ஒரு மூன்று பேருந்து நிறுத்தங்கள் தாண்டிச் சென்று வந்தேன். நன்றாகத் தான் இருந்தது.</div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
<br /></div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
இதை ஒரு வழக்கமான நடவடிக்கையாகவே மேற்கொள்ள வேண்டுமென்ற ஒரு வெறியில், அலுவலகத்திலிருந்து அடுத்த சந்திப்பு வரை( கிட்டத்தட்ட 5.5 கிமி) அடிக்கடி நடப்பது என முடிவானது. இதன் வசதிக்காக, வைத்திருந்த கைப்பை Backpack'காக மாறியது. வாட்டர் பாட்டில், குளூகோஸ் எல்லாம் கூட வைத்துக்கொள்ளலாம் என எண்ணம். முதல் நாளன்று சீக்கிரமே அலுவலகம் வந்து வேலையெல்லாம் வேகவேகமாக முடித்து வெளிச்சத்தோடே கிளம்புவதாகத் திட்டம் .அரைமணி நேர தாமதமாகத் தான் ஆனால் கிளம்ப முடிந்தது. அலுவலகக் கதவைக் கடக்கும் முன்னரே ஒரு குதூகலம் தொற்றிக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. இதற்கு முன்னால் பள்ளிக்கூட சுற்றுலாப்பயணங்களுக்கு இருந்தது போன்ற ஒரு உற்சாகம். வெளியேறி நடக்க ஆரம்பித்தேன். வெளிச்சம் அவ்வளவாய் மறையவில்லை. சாலைகள் பேருந்திலிருந்து பார்த்தைவிட வித்தியாசமாகவும் விசாலமாகவும் அழகாகவும் இருந்தன.மாலை நேரக்கடைகளுடன் கூடிய சிறு கடைவீதித் தோற்றம் அவ்வளவு புதிதானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது. பேருந்தில் சில நிமிடங்களில் தாண்டிவிடும் இடம் பார்க்க ஒரு 15 நிமிடத்திற்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. அதை எல்லாம் தாண்டி நடந்ததும் வீதியும் நானும் விரையும் வாகங்களும் மட்டுமே இருந்தோம்.</div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
<br /></div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
தினமும் கடக்கும் சாலை தான் எனினும் சில இடங்களை அதற்கு முன்பு அதைப் போல பார்த்ததாக நினைவே இல்லை. பாதி கடக்கும் முன்பே நன்கு இருட்டிவிட்டது, ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த பின்பு அந்த முக்கிய சந்திப்பை வந்தடைந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து வீட்டுக்குச் சென்றேன். அன்றைப் போலவே சீக்கிரம் வந்து சீக்கிரம் கிளம்பி வாரத்தில் இரண்டு நாட்களாவது நடக்க வேண்டுமென முடிவு செய்தேன். இது நடந்து கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டன. அதற்கென மாற்றிய பை, செருப்பு இன்றுவரை தொடர்கிறது. ஆனால் நடப்பது ? ;)</div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
<br /></div>
<div mce_style="text-align: justify;" style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; font-size: 13px; line-height: 19px; text-align: justify;">
~பயணிக்கலாம்..</div>
குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-44535459097895734602012-09-11T07:54:00.000-07:002012-09-11T07:58:28.642-07:00[மறைந்த தடங்களின் குரல்] ஜனநாயகம் இனி மெல்ல...<div style="text-align: justify;">
2020'ல் இந்தியா வல்லரசாகிவிடும் என இன்னமும் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் தான் பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கிய பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் விவசாயம் பார்க்க முடியாமல், சோற்றுக்கில்லாமல், தாமும் தங்கள் பிள்ளைகளுமாக நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து தேய்ந்துகொண்டிருந்த அப்பாவி மக்களை பலிகொடுக்கிறோம். அவர்களது ஒழுங்கீனங்கள் நமக்கு விபத்துக்கு பின் தான் தெரிய வருகின்றன. நல்லது. இனி அடுத்த வருடமோ இரண்டு வருடங்களிலோ நிகழப்போகும் விபத்து வரை நான் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவே தான் நம்புவோம். அதுவும் நல்லது. இது கிடக்கட்டும். தீபாவளி பட்டாசு வாங்குவதற்குள் மறந்துவிட வசதியான விஷயம் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரிசையாக குழந்தைகள் விபத்துக்குள்ளானார்கள். வாகனங்களில் பள்ளிகளில் சாலைகளில் ஆழ்துளைக்கிணறுகளில் கழிவுநீர் தொட்டிகளில் என ஒரு சீசன் போல தினம் ஒன்று நிகழ்ந்தது. எங்கே கவனக்குறைவு நிகழ்கிறது என சற்றேனும் சிந்தித்துப்பார்க்காமல் நம் வீட்டு குழந்தைகளையும் பள்ளி ஆட்டொவிலோ வேனிலோ அனுப்பிவிட்டு சிறிது நேரமானால் பதைபதைப்பதுடன் முடிந்தது. அதே பள்ளிகளில் சேர்க்கைக்கு இந்த வருடமும் இரண்டு தெருவிற்கு வரிசை நீளும். ப்ளாக்கில் டொனேஷன் கொடுத்து யாரையாவது பிடித்து சீட் வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிட்டு பார்ட்டியிங் நடக்கும். வாகனப் பாதுகாப்புச் சட்டங்கள் பலத்தப்படும். ஆர்.டி.ஓ ஆபீசர்கள் இன்னமும் ரூல்ஸ் பேசி பணம் பிடுங்கி செழிப்பர். நல்லது.</div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmqoNFzFdN51VWyaRrw-_9S6hq27vquwhnHniQOye8HuuQ8HLTAh6iLCug5WIeQDq4avsEE_JFvl_V7ri57y3zIzdrd342LHlFY3-fDe-EDVBAdBJSB_ZQRFpomGK5l3owAZMLV2EK44nF/s1600/04MA_FIRE_TUT_1_1198340g.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" hea="true" height="235" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmqoNFzFdN51VWyaRrw-_9S6hq27vquwhnHniQOye8HuuQ8HLTAh6iLCug5WIeQDq4avsEE_JFvl_V7ri57y3zIzdrd342LHlFY3-fDe-EDVBAdBJSB_ZQRFpomGK5l3owAZMLV2EK44nF/s320/04MA_FIRE_TUT_1_1198340g.jpg" width="320" /></a></div>
இதோ இந்த வருடத்தில் மட்டும் மூன்று அனல் மின் நிலைய விபத்துகள். எல்லாமே நெருப்பு விபத்துக்கள். நல்லவேளை அனல் மின் நிலையமாகப் போய் அக்கம் பக்கத்து ஊர்காரர்கள் பிழைத்தார்கள். விபத்தி ஏற்பட வாய்ப்பே இல்லாத சூப்பர்மேன் அணு மின் நிலையம் ஏற்பாடு செய்கிறார்களே, அங்கே நிகழ்ந்திருந்தால் ? அவ்வ்வ்! நோ. அதெப்படி விபத்து நடக்கும். தீப்பிடித்து எரிந்தால் கூட அது எரியாது என்று பொங்கியெழுந்து பதில் அளிக்கும் நண்பர்களே. உலகத்தில் பெரும்பாலான அணு உலை விபத்துகள் ஏற்பட்டது மனிதத் தவறுகளால் தான் என்று அறிவீர்கள் தானே! டெல்லியில் எப்படியோ(?!) ஒரு காயலான் கடைக்கு வந்து சேர்ந்து வெகு நாளாக இருந்து அதன் உரிமையாளரை சாகடித்த கதிர்வீச்சுப் பொருளும் இங்கே கல்பாக்கத்தில் இரண்டு தொழிலாளிகள் திருடிக் கொண்டு வந்து நடுவில் பயந்து அதை கூவம் நதியில் வீசி இரண்டு நாட்கள் கூவத்தையே குடைந்த கதைகளும் அங்கே நடக்காமல் இருக்கும் என்று நம்புவோமாக! என்ன, நம்பவில்லையா? வெளியில் சொல்லாமல் இருக்கவும். நீங்களும் தேசத் துரோகியாக சிறை செல்ல நேரலாம். யார் கண்டது?</div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR5KtRqOICC0EgEkSB1tFuikIgPfQfz6zYBORhyphenhyphenHoZzJlxv-wBXTOSovxPUO4qM5CV_ZdvZKQrnP0nHwStJP0QgqOmD0ELTnfEkslHy4PzHj15HZnCdG8jfsY1tiGktOjRihhze2BbsMT9/s1600/1541837.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" hea="true" height="226" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR5KtRqOICC0EgEkSB1tFuikIgPfQfz6zYBORhyphenhyphenHoZzJlxv-wBXTOSovxPUO4qM5CV_ZdvZKQrnP0nHwStJP0QgqOmD0ELTnfEkslHy4PzHj15HZnCdG8jfsY1tiGktOjRihhze2BbsMT9/s320/1541837.jpg" width="320" /></a></div>
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், பொதுவாகவே நம் அரசு ‘Reactive' modelஐத் தான் கையாண்டுவருகிறது. Proactive என்பது மிக சொற்பம் தான். முதற்சொல்லப்பட்ட மாடலும் ‘இதான் உங்க டக்கா’ ரேஞ்சுக்கு மிக மிக மெதுவானது. சாதாரண ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வோம். மிக அதிகமான அளவில் போக்குவரத்து புழங்கும் வகையில் ஐடி கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கியாகிவிட்டது. அதற்கு ஏற்றவாறு சாலை வசதிகளை எப்போது அமைத்தார்கள் ? இப்போது முக்கிய இடங்களில் பொறுக்க முடியாத அளவு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பாலங்கள் கட்டலாம் என இனிமேல் தான் முடிவெடுப்பார்கள். அதைக் கட்டி முடிக்கும் வரை நமக்கு தான் முழி பிதுங்கும். கம்பெனிகளுக்கான அனுமதி கொடுப்பவருக்கும் போக்குவரத்துத் துறைக்கும் சாலை மேம்பாட்டுத் துறைக்கும் கம்யூனிக்கேஷனே இருக்காது. அப்போது தான் போட்ட சாலையை குடிநீருக்கு ஒரு முறை, கழிவுக்குழாய்க்கு ஒரு முறை, தொலைப்பேசிக்கு ஒரு முறை என எத்தனை தடவை வேண்டுமானாலும் சளைக்காமல் தோண்டுவோம். அதற்குள் ஆட்சி வேறு மாறிவிட்டால் கிழிந்தது. அது தானே நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாம்? பேரிடர்களில் ஒன்றான போபால் விபத்தும் அதன் வழக்கும் நஷ்ட ஈடும் அக்கழிவுகளை எப்படி அகற்றினார்கள் (அதான் ஒண்ணுமே பண்ணலையே’ன்னு எல்லாம் கேட்கப்படாது. Refer முந்திய பத்தி கடைசி வாக்கியம்) என்றெல்லாம் பார்த்துகொண்டு தானே இருக்கிறோம் ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒன்றுமில்லை. இங்கே கல்பாக்கத்திலேயே ஒரு பெருவிபத்து நடந்தால், 45-50 கிமீ தூர சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்தில் காலி செய்ய வேண்டியிருக்கும். மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். அதற்குள் உங்களுக்கு தகவல் தெரிய வைத்து சென்னை ஐடி சாலையில் ஒரு பகுதியையும், ஈ.சி.ஆரில் ஒரு பகுதியையும், அந்த பக்கம் மரக்காணம், இந்த பக்கம் வந்தவாசி வரை மூன்று பக்க சுற்றளவையும் காலி செய்யும் அளவிற்கு அரசு இயந்திரம் வேகமாக செயல்படும் என நம்புகிறீர்கள் ? எல்லாம் பூண்டோடு கைலாசம் தான். அதுவும் குரூரமாக. மெல்ல மெல்ல.வலியிலும் வேதனையிலும் துடிக்க துடிக்க. நீங்கள் மட்டுமில்லை. உங்கள் குடும்பம். உங்கள் குழந்தைகள். இனி வரும் பல தலைமுறைகளுக்கும்.சே. சொல்லவே ரொம்ப கொடூரமாக இருக்கிறது!!!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu4P14wWNBPhLlkRzEyz8zxXy0wkNEnHAv3E0L6kXU2ck4OSiJFjMQYh7HDWyPjr0a7uXiBfmRHKBIPHas1WdgIgFS8E-uOD_KIqGvLZXwYP_rWYsGksphHbi_bi-ujoVDCgJLc-OD3ISI/s1600/mg_9702-large.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" hea="true" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu4P14wWNBPhLlkRzEyz8zxXy0wkNEnHAv3E0L6kXU2ck4OSiJFjMQYh7HDWyPjr0a7uXiBfmRHKBIPHas1WdgIgFS8E-uOD_KIqGvLZXwYP_rWYsGksphHbi_bi-ujoVDCgJLc-OD3ISI/s400/mg_9702-large.jpg" width="400" /></a></div>
இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையிலேயே தான் அங்கே போராட்ட குழுவினருக்கு எதிராக வன்முறை கையாளப்பட்டிருக்கிறது என்ற செய்தி வருகிறது. அப்பாவி மக்களுக்கு எதிராக ஏதோ பாகிஸ்தான் பார்டரைப் போல ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட போலீசார். ஒரு வருடமாக அறவழியில் போராடி வருபவர்களுக்கு தடியடியும் கண்ணீர்ப் புகையும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனப் பள்ளிகளில் படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த பிரக்ஞையும் இல்லாமல் சாலையில் ஓரம் சிறுநீர் கழிக்கும் குடிமகனுக்கு மட்டுமே ஜனநாயகம் செல்லுபடியாகும் போல! இன்னமும் கூடங்குளம் வந்தால் தான் இந்தியா வல்லராசாகும் என்று யாராவது சொல்லிக்கொண்டு இருந்தீர்களானால், மன்னிக்க வேண்டும் நண்பர்களே. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இன்னமும் நிறைய இருக்கிறது. கீற்று, dianuke போன்ற தளங்களில் கூடங்குளம் எனத் தேடி அத்தனை விஷயங்களையும் தெளிவாக, திறந்த மனதுடன் படித்துவிட்டு வாருங்கள். அணு உலை விபத்து காப்பீடு சட்டம் 2010 ஒன்றை இயற்ற உள்ளார்கள் இல்லையா, அதைப் பற்றியும் படித்து விடுங்கள். கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெகுவாக பெருகிவரும் கொடூர கேன்சர் நோய்கள் குறித்த, ஒரு மருத்துவர் இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள். இது சம்பந்தமாக இங்கே நடக்கும் கூட்டங்களில் ஏதேனும் ஒன்றில் கலந்துகொண்டு அவர்களின் பிரதிநிதிகளின் வாதங்களைக் கேளுங்கள். அதன் பின் நிறைய பேசலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படியும் மனது கலங்காமல் இருந்தீர்களானால், எவன் செத்தா எனக்கென்ன என்ற மிகச்சராசரி மனிதனின் மனநிலையிலேயே தான் இருக்கிறீர்கள் என அர்த்தம். ஆனால் ஒரு நாள் அது உங்களையும் துரத்தி வரலாம். அப்போது சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகமூடி அணிந்தது போல, கதிரியக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வழியே இல்லை. உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் சேர்த்து தான் அவர்கள் போராடுகிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்திற்கும். அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனினும் தேசத்துரோகிகள் எனவும் அந்நியசதிக் கைக்கூலிகள் எனவும் அவமானப்படுத்தாமல் இருப்போம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் நம்மை சரிவர வந்தடையவில்லை. அரசும் பொறுப்பற்ற ஊடகங்களும் அரசியல்வாதிகளையும் கண்மூடித்தனமாக நம்பாமல் கொஞ்சம் நாமும் கொஞ்சம் ‘மெய்ப்பொருள்’ காண இனிமேலாவது முயல்வோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க ஜனநாயகம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-39303761411086986932012-08-30T11:47:00.001-07:002012-10-29T10:55:49.614-07:00The PITSTOP...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLcess81Cc8OriTphrrqq6YTxv7NgroMkScjP86_-wwmCI9F4LKoolYyBivUIF27S_F9Mi_G_VkYQdlDDp97ZJKeo5nZrohu9-DSnbbtlfpCzqKOmCfvxWo_wIo5UzcoMshtQU2HbXsdq9/s1600/Pic1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="291" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLcess81Cc8OriTphrrqq6YTxv7NgroMkScjP86_-wwmCI9F4LKoolYyBivUIF27S_F9Mi_G_VkYQdlDDp97ZJKeo5nZrohu9-DSnbbtlfpCzqKOmCfvxWo_wIo5UzcoMshtQU2HbXsdq9/s640/Pic1.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயணங்கள் குறித்த எனது ஆழ்மன பிம்பங்களை மேலும் மெருகேற்றிச் சென்றது சமீபத்தில் பார்த்த திரைப்படம் ஒன்று. வெகு நாளாகவே எனது பயணங்கள் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என மேலோட்டமாய் நினைத்திருந்ததை மிக ஆழமாக யோசிக்க வைத்தது. பயணங்களின் மீதான எனது ஆர்வத்தின் ஆதியை தேடி பயணிக்க வைத்தது. ஒரு படைப்பாக அப்படத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்ததை, அதைப் பற்றி மட்டும் பேசாமல், அது தூண்டிய அத்தனை எண்ணவோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எனது பயணங்கள் மற்றும் பயணங்கள் சார்ந்த அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலாய் இந்த பதிவை/தொடரை ஆரம்பிக்க வைத்தது. ஒரு நல்ல படைப்பின் குணாதிசியம் அது தானே! எவ்வளவு தூரம் இதை தொடர முடியும் என தெரியவில்லை எனினும் உற்சாகத்துடன் ஆரம்பிக்கும் ஒரு பயணத்தின் மனநிலையிலேயே இதையும் தொடங்குகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லோருக்குமான பயணங்களின் முதல் சுழி இவற்றில் ஏதாவதில் இருந்து தான் ஆரம்பித்திருக்கும், சொந்த ஊருக்குச் செல்வது - திருத்தலங்களுக்குச் செல்வது - பள்ளி/குடும்ப சுற்றுலாக்கள் போன்றவை. . குடும்ப சுற்றுலாக்கள் எல்லாம் நமக்கு பழக்கமே இல்லை! பெரும்பாலான பள்ளி சுற்றுலாக்களுக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டே இருந்து வந்திருக்கிறது அதன் பொருட்டே அவை மிகுந்த வசீகரமுடையதாய் இருந்தன. இடையில் நான் அழுதுபுரண்டு வாங்கிய சில அனுமதிகளில் தான் என் முதலும் முக்கியமுமான பயணங்கள் தொடங்கின. பால்பண்ணையை பார்வையிடச் சென்றதிலிருந்து கோனே அருவி வரை, வாழ்வின் முக்கிய ஆசீர்வாதங்களில் ஒன்றாக நான் பயணங்களைத் துதிக்கத் தொடங்கினேன். துரதிர்ஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் என் பெரும்பாலான பயணங்கள் என்பது சொந்த ஊருக்குச் செல்வது மட்டுமே. அந்த பேருந்து பயணமும் இரவின் குளுமையும் முகத்தில் அறையும் காற்றை உள்ளிழுத்தையும் எங்கள் ஊரைச் சுற்றி சுற்றி வந்ததையும் பயணக்கனவுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு “ஐ லவ்வ்வ்வ்வ் டு ட்ராவல்” என இண்டர்வியூக்களில் படம் போட்டிருக்கிறேன். (நானும் எவ்வளவு நாளைக்குத்தான் “ரீடிங் புக்ஸ், ஹியரிங் மியூசிக்” என்ற ரெக்கார்டைத் தேய்ப்பது. தூங்குவது தான் என் பொழுதுபோக்கு என்று கூட ஒன்றில் சொன்ன ஞாபகம். இவை எல்லாம் இல்லாமல் நான் என்ன செய்ய ஆசைப்படுவேன் என நானே சிந்தித்ததன்(?!) விளைவு தான் மேற்கூறியது.)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் கடந்த சில வருடங்களாக நான் நினைத்திருந்த மாதிரியான பயணங்களை செய்வதற்கு வாய்ப்பமைந்தது. இத்தனை வருடங்களாக நான் மொத்தமாக பயணித்ததில் கடந்த சில வருடங்களில் செய்தது தான் 80-90 சதவிகிதம் இருக்கும்! சொற்பமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவை முக்கியமானவைகளே. பார்த்தது ஊரளவு, பாராதது உலகளவு என்ற உண்மையை உணர்த்தி என் கனவுகளையும் பல அனுபவப்பாடங்களையும் மேலும் வளர்க்கவே அவை உதவியிருக்கின்றன. பயணம் பிடிக்காத மனிதர்களும் இருப்பார்களா? ஒரு வயது கூட நிரம்பாத குழந்தைகள் கூட ’டாட்டா’ செல்வதற்கு காட்டும் உற்சாகத்திற்கு என்ன காரணம் ? எனப் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம். அவை பயணம் செய்பவனை மேம்படுத்துகின்றன. இயற்கையோடான உறவை புதுப்பிக்கின்றன. ஒரு குழுவாக செல்லும் போது அவர்களின் உறவு பலப்படுத்தப்படுகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள பக்குவப்படுத்துகின்றன. அப்படிக் கிடைத்த பயண வாய்ப்புகளில் சில இடங்களில் நாட்கணக்கில் சோறுதண்ணியில்லாமல் கூட உட்கார்ந்திருக்கலாம் என ஒரு மாதிரி எக்ஸ்ட்ரீமாகக் கூடத் தோன்றியிருக்கிறது. எதையும் ரொம்ப உணர்வுபூர்வமாக அணுகினால் இப்படியிருக்குமா என என்னென்னவோ யோசித்திருக்கிறேன். இந்த படம் பார்த்ததுக்கு பின்பு எல்லாமாக சேர்ந்து ஏதேதோ நினைவுகள் அலைமோதி அன்றிரவு தூங்கமுடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த படம் தெ வே. வாழ்வின் சில மிகப் பெரிய அர்த்தங்களை தன் நீண்ட பயணங்களில் தேடும் மகன். தன் தொழிலும் கோல்ப் கோர்ட்டுமான மேல்தட்டு வாழ்க்கையிலேயே திருப்தியாயிருக்கும் கண் மருத்துவரான அப்பா. மகனை புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளில் பெரிதான வெற்றி காணாதிருக்கிறார். ஒரு வாக்குவாதத்தில் இதுதான் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என சொல்லும் அவருக்கு, "வாழ்க்கை தேர்ந்தெடுப்பதற்காக இல்லை. வாழ்வதற்கு" என சொல்லி முடிக்கிறான் (You don't chose a life. You live one.) துரதிர்ஷ்டவசமாக தான் மேற்கொண்ட ஒரு முக்கிய, கிறிஸ்தவர்களின் புனிதப்பயணங்களில் ஒன்றான சான் டியாகொ(ஸ்பெயின்) செல்வதற்கான வழியில், புயலில் சிக்கி பயணத்தின் ஆரம்பத்திலேயே இறக்கிறான். மகனின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அப்பா ஸ்பெயின் வருகிறார். அவன் பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்கிறார். அவனுடைய பாஸ்போர்ட், ஹெட்லாம்ப், கைத்தடி, பை என பார்க்க பார்க்க அவன் அவரை கேட்ட கேள்விகள் சில நினைவுக்கு வருகின்றன. அது “வாழ்க்கையில் என்ன கண்டிருக்கிறீர்கள் ? உலகத்தை நீங்கள் பார்க்கவேயில்லையே ? இந்தியா, நேபால், இமயமலை, மொராக்கோ, எகிப்து, பப்பூவா கினியா? உங்கள் கூண்டிலிருந்து முதலில் வெளியே வாருங்கள்”. (இதில் பெரும்பாலானவை என்னுடைய ஹிட்லிஸ்டில் இருப்பவை!)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVEARXlhkH8dglUS5Qj3-kcGm4uRkpI-w-Mlgl2xsFLQK8rSewMYYtPay0A0mvVO0EoolC8BRqtko0F0W-5JsDDmdbblUPVg-Jazr4aRoNpEOylfPa_e1uy53Azn8xKRMS8IoltOQvzSmg/s1600/1+The+Way+%2528flyer%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVEARXlhkH8dglUS5Qj3-kcGm4uRkpI-w-Mlgl2xsFLQK8rSewMYYtPay0A0mvVO0EoolC8BRqtko0F0W-5JsDDmdbblUPVg-Jazr4aRoNpEOylfPa_e1uy53Azn8xKRMS8IoltOQvzSmg/s320/1+The+Way+%2528flyer%2529.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
தன் மகனை புரிந்து கொள்வதற்கான கடைசி சந்தர்ப்பமாக அத்தருணத்தில் தன் வேலை வீடு என அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு அந்த பயணத்தை தான் முடிக்கவேண்டுமென நினைத்துக் கிளம்பும் அவரின் பயணம் தான் முழுக்கதையும். தம் வழக்கப்படி அல்லாமல் அவன் உடலை எரித்து, அச்சாம்பலை வழியெங்கும் முக்கிய இடங்களில் தூவுகிறார். சக பயணிகள் எதற்காக வருகிறார்கள், அவர்களுக்கிடையே என்ன மாதிரியான உறவு, முடியும் போது அவர்களின் மனநிலை என மீதிப்படம் ஒரு அழகிய சிறுகதை. அது நடந்தே கடக்கும் ஒரு பாதை. படம் முழுவதும் அதுவும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம், இல்லை இல்லை கதாநாயகனும் அதுவே! அப்படி ஒரு அழகு, ஏற்கனவே பிரான்ஸ் கிராமங்களைக் குறித்து படித்தது போதாதென்று ஸ்பெயின் கிராமங்களை வேறு இதில் பார்க்கவும், கிளைமாக்சில் அவர்கள் சென்றடையும் அந்த தேவாலயத்தின் பிரமிப்பும் கட்டிடக்கலையின் அழகும் நுணுக்கமும் - படம் முடியும் தறுவாயில் நானும் ஒரு முறை கட்டாயம் அங்கே செல்வேன் என உறுதிசெய்து கொண்டேன். ( இது மாதிரி எத்தனை?!)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படம் பார்த்து முடித்த, அதன் பாதிப்பு முழுதாக அகலாமல் இருந்த ஒரு இரண்டு நாட்களில் பாலோ கொயெலோ’வின் பில்கிரிமேஜ் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். சத்தியமான என்னால் நம்பமுடியவில்லை. அதிலும் சான் டியாகொ!!! அப்பயணத்தை முடித்த பின்பு தான் அவர் இந்த நாவலையே எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி படத்தில் வரும் எழுத்தாளரும் சகபயணியுமான ஒருவர் சொல்லும் படி ஒரு காட்சி இருந்தது. அதை நான் சரியாக கவனிக்கவில்லை. ஆனாலும் அப்படத்தைத் தொடர்ந்து இந்நாவல் - பாலோ நாவல்களில் வருவது போலவே, "இது தற்செயல் இல்லை. நீ சான் டியாகோ போகவேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்டிருக்கிறது(?!!) இது ஒரு குட் ஓமன்!!!" என என் மனசாட்சி கூவியது. பாலோ...பார்க்கலாம் :)</div>
<br />
<div style="text-align: right;">
(மேலும் பயணிக்கலாம்..)</div>
<div>
<br /></div>
குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-76038576926717274872012-03-13T09:32:00.000-07:002012-03-13T09:32:13.630-07:00[மறைந்த தடங்களின் குரல்] – என் காகிதக்கொக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEickqBH-6vpwQWgGqhTAvraJxrqdfdwWNyasjWyFGj_EXWa2IJLf1lfDVGHtFkvq4hScd5NKoV9moUGKaqSYY-0koUeKgT1mTH8S4xLopB_KnpQ07CytiKMhe7RNm1P04CQF7Irs7aCkf4/s1600/IMGP6148.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="237" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEickqBH-6vpwQWgGqhTAvraJxrqdfdwWNyasjWyFGj_EXWa2IJLf1lfDVGHtFkvq4hScd5NKoV9moUGKaqSYY-0koUeKgT1mTH8S4xLopB_KnpQ07CytiKMhe7RNm1P04CQF7Irs7aCkf4/s320/IMGP6148.JPG" width="320" /></a></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
சடாகோ’வும் ஆயிரம் காகிதக்கொக்குகளும் என்ற அமெரிக்க எழுத்தாளரின் புத்தகம் குழந்தைகள் இலக்கியத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜப்பானின் புகழ் பெற்ற மிக அரிதான டஞ்சோ கொக்குகள் அதிர்ஷ்டத்தை, ஆயுளை, செல்வத்தைக் கொடுக்கக்கூடியது என்ற நம்பிக்கையையும், அவர்களில் புராதன கலையான ஆரிகேமியையும் அணுவீச்சுக்கு எதிரான குரலையும் ஒரு புள்ளியில் இணைக்கும் அந்த புத்தகத்தின் பின்னால் உள்ள உண்மைக்கதை என்ன தெரியுமா ?</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
ஹிரொஷிமா நகரில் அனுகுண்டு வீசப்பட்ட போது, ஊரே அழிந்ததில் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ பிழைத்த வெகு சிலரில் இரண்டு வயது ஷடாகோ சஷாகியும் ஒருத்தி. ஊருக்கு வெளியே இருந்த மிசாஷா பாலத்தில் அருகில் உள்ள வீட்டில் இருந்த அவள் குடும்பம், உயிர் பிழைத்தாலும் அணுவீச்சின் பலமான தாக்குதலுக்கு ஆளானது.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
அவள் வளர வளர அணுவீச்சின் பாதிப்பில் நோயும் அவள் கூடவே வளர்ந்தது. உடல் முழுக்க நீலப்புள்ளிகள் தோன்றத் தொடங்கின. சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானது. கால்கள் செயலிழக்க ஆரம்பித்தன. உச்சகட்டமாக, அவள் பன்னிரெண்டாவது வயதில் அவள் இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள். அதற்கும் அணுவீச்சே காரணமாக இருந்தது.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
ஒரு வருடம் தான் அவள் பிழைத்திருப்பாள் என மருத்துவர்கள் கெடு விதித்துவிட்ட நிலைமையில் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கோ விளையாடவோ செல்ல முடியாத ஏக்கத்திலும் நோயின் கோரப்பிடியிலும் அவள் நாளுக்கு நாள் வாடத் தொடங்கினாள்.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
அவளை அடிக்கடி வந்து சந்தித்து விளையாடிப் போகும் தோழி ஒருத்தி ஒரு நாள் காகிதக்கொக்கு ஒன்றை செய்துவந்து கொடுத்தாள். காகிதக்கொக்குகள் நீண்ட ஆயுளைக் கொடுக்கக்கூடியது என்றும் ஆயிரம் கொக்குகளை செய்து முடித்துவிட்டால், அவள் கண்டிப்பாக பிழைத்துவிடுவாள் என்றும் கூறினாள். அடுத்தவர்களின் துயரத்தைப் புரிந்து கொள்வதன் அடையாளமாகவே தான் கொக்குகளை உருவாக்குகிறேன் என்று தோழி சொன்னாள். இதை சஷாகி மிகத்தீவிரமாக நம்பினாள். அடுத்த நாள் முதல் அவள் காகிதக்கொக்குகளை செய்யத் தொடங்கினாள்.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
கிடைத்த காகிதங்களில் எல்லாம் கொக்குகளை செய்து தன் படுக்கையில் தொங்கவிட்டாள். காகிதங்கள் கிடைக்காத போது மருந்து உறைகள், பக்கத்து படுக்கை நோயாளிகளின் மருந்துச்சீட்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டாள். எப்படியாவது ஆயிரம் கொக்குகளை செய்து விட வேண்டும், வாழ்ந்து விட வேண்டும் என்ற உத்வேகம் அவளிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
ஆனாலும் நோயின் உக்கிரம் முற்றி, 644 கொக்குகளை செய்து முடித்திருந்த நிலைமையிலேயே சஷாகி இறந்தாள். இந்த செய்தியை அறிந்த பள்ளி மாணவர்கள் அவள் ஆசைப்பட்ட படியே மீதமிருந்த 356 கொக்குகளை செய்து அவளோடு சேர்த்து புதைத்தனர். இச்செய்தி நாடு முழுக்க பரவியது. அன்றிலிருந்து இன்று வரை காகிதக்கொக்குகளை சமாதானத்தின் அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள். வீட்டினுள் காகிதக் கொக்கு பறந்து கொண்டிருப்பது அமைதி மற்றும் சந்தோஷத்தின் அடையாளமாக நம்பப்படுகிறது.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
ஹிரோஷிமாவில் சஷாகிக்கு ஒரு நினைவிடம் அமைக்கபட்டு ஆண்டுதோறும் பள்ளிமாணவர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து காகித கொக்குகளை செய்து அங்கே காணிக்கை ஆக்குகிறார்கள். இறந்தவர்கள் காகித கொக்குகளின் குரலை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒருநம்பிக்கை இதிலிருந்து வளரத் துவங்கியது. ஜப்பானியர்கள் அணுவீச்சின் எதிர்ப்பு அடையாளமாக காகித கொக்குகளை உருவாக்குகிறார்கள். இன்றும் ஆகஸ்ட் 6ம் நாள் நாடெங்கும் காகித கொக்குகள் தயாரிக்கபட்டு பறக்கவிடப்படுகின்றன.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
காண் என்றது இயற்கை என்ற எஸ்.ரா வின் புத்தகத்தைப் படிக்கையில் டஞ்சோ கொக்குகள் குறித்த ஒரு கட்டுரையில் சடாகோவைப் பற்றி படிக்க நேர்ந்தது. இப்போது நாம் இருக்கும் சூழ்நிலையில் இக்கதையைப் பகிர்ந்துக்கொள்வது மிக அவசியம் எனப்பட்டது. அணு உலை என்பதும் அணுகுண்டுக்கு நிகரானதே. நம் நாட்டில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்களும் அரசின் கண்ணாமூச்சி ஆட்டங்களும் அதற்கு பின்னாலான மிகப்பெரும் உலக அரசியலும், என் போன்ற சராசரிப் பொதுமக்களின் வழக்கமான புறக்கணிப்பும், அதீத அறிவாளிகளின் பார்வையாக அறிவியல் முன்னேற்றத்தின் மற்றொரு படியாக இது இருக்கும் இந்நொடியில் , என் எதிர்ப்புக்கான முதல் காகிதக்கொக்காக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
உலகெங்கிலும் பறக்கவிடப்பட்ட அத்தனைக் காகிதக்கொக்குகளுக்கான நம்பிக்கையும் பிரார்த்தனைகளும் வீணாகிப் போகாமலிருக்க மனமார வேண்டிக்கொள்கிறேன்.</div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
<br /></div>
<div style="background-color: #efefef; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 21px;">
மேலதிகத் தகவல்களுக்கு<br /><a href="https://en.wikipedia.org/wiki/Sadako_Sasaki" style="color: #141464; text-decoration: none;">https://en.wikipedia.org/wiki/Sadako_Sasaki</a></div>
</div>
kutipaiyahttp://www.blogger.com/profile/10011307315626138792noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-89282225260766406532012-02-29T05:52:00.019-08:002012-03-01T04:05:00.714-08:00[மறைந்த தடங்களின் குரல்] - நான் சராசரி<div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">நான் பெரிய சமூக நல விரும்பி இல்லை. அவசியம் இல்லாதவற்றில் மூக்கை நுழைப்பது, பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது போன்றவை எனக்கு சிறு வயதிலிருந்தே போதனை செய்யப்பட்டுள்ளது. நாம் உண்டு நம் வேலையுண்டு என்றிருப்பதே நன்மை பயக்குமென மிகத் தெளிவாக எனக்குள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. என் சொந்த பிரச்சனைகளை நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. பொதுப்பிரச்சனைகளை மிக நெருக்கமானவர்களிடம் மட்டும் எப்போதாவது அது குறித்த செய்திகள் பார்த்தால் பேசுவதுண்டு. “இவனுங்க எப்பவுமே இப்படித்தான் சார்! இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க! இப்படித்தான் சுட்டுத்தள்ளனும்..சவூதி’ல மாதிரி தண்டனை வரணும் இங்கயும்! போன்ற சூடான விவாதங்களைக் கூட பிரயாணத்தில் பக்கத்தில் இருந்து வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன். அவர்கள் கருத்து வேண்டி என் பக்கம் பார்த்தால் கூட நான் முகத்தை திருப்பிக்கொள்வேன்.</div><div style="text-align: justify;"><br />எனது அதிகபட்ச சமூகப்பொறுப்பினை நான் எனது பிளாக்கிலோ பேஸ்புக்கிலோ பதிவாக அல்லது ஸ்டேட்டஸ் மெஸேஜாக பிரகடனப்படுத்திக் கொள்வேன். அல்லது அன்னா ஹசாரே போன்ற அமைதி/அஹிம்சை போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவித்து மெழுகுவத்தி ஏற்றுவேன். லோக் பால் இஸ் த சர்வரோக நிவாரணி என நம்புவேன். அப்படின்னா என்ன என்று கேட்பவர்களுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறுவேன். கடைசியாக சொல்லுவேன் அது வந்தா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்காது. நம்ம காசு மிச்சம் என்று.</div><div style="text-align: justify;"><br />வாழ்வாதார போராட்டங்கள் எப்போதும் எனக்கு மிகையாக தோன்றும். இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் அண்டை நாட்டில் நடந்து கொண்டிருந்தாலும் அது என்னைப் பெரிதாக பாதிக்காது. என் நாட்டிலேயே சுனாமியோ பூகம்பமோ எது நிகழ்ந்தாலும் எனக்கு நிகழாதவரை ஒரு செய்தியே. குடிநீர் வேண்டி பெண்கள் தெருமுனையில் போராட்டம் என்றால் கூட நான் வேறுவழியில் விலகிப் போய்விடுவேன். போலீஸ், அரசாங்க அதிகாரிகளை சந்திக்க நேர்ந்தால் அடக்கமாக நடந்துகொள்வேன். பின்னால் போய் கேவலமாக திட்டுவேன். அரசாங்க கார் செல்கிறது என மணிக்கணக்காக சாலையில் காக்க வைத்தால் கூட யார் போகிறார்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கமாட்டேன். எனக்கு வேலை முடிய வேண்டுமென்றால் சபித்துக்கொண்டே லஞ்சம் கொடுக்க தயங்க மாட்டேன். வேலையை விட்டுட்டு யார் அலைவது என அதை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.</div><div style="text-align: justify;"><br />எனது கோபங்களை வெறுப்புகளை கொலைவெறியை, வாஷ்பேசினில் சிக்கிக்கொண்ட பூச்சியையும் கழிவறையில் கரப்பான்பூச்சியையும் தண்ணீர் ஊற்றிக்கொன்றோ, இரவு முழுக்க கத்திக்கொண்டிருக்கும் நாய்க்குட்டிகளை காம்பவுண்டில் இருந்து துரத்தியோ, வயதான பிச்சைக்காரருக்குக் கூட சில்லறை இல்லை என தவிர்த்தோ, பாக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் குமிழ்களை உடைத்தோ, பழைய பேப்பர்களை சுக்குநூறாக கிழித்தோ தீர்த்துக்கொள்வேன்.</div><div style="text-align: justify;"><br />20 குழந்தைகள் சாப்பிடும் செலவில் நான் ப:பே செல்வேன். கொடுத்த காசுக்கு நாசூக்காக சாப்பிடுகிறேன் பேர்வழி என நாகரிகம் கடைப்பிடிப்பேன். வோட்டுப் போட மாட்டேன். எந்த ஆட்சி வந்தாலும் குறைப்பட்டுக்கொள்வேன். என்னைப் பொறுத்த வரையில் அரசியல் ஒரு சாக்கடை. எனது அடிப்படை உரிமைகள் சில மழுங்க அடிக்கப்படுவது தெரிந்தும் பெரிதாக வருத்தப்பட மாட்டேன். என்கவுண்ட்டர்களுக்கு சப்போர்ட் செய்வேன். பெட்ரோல் விலை ஏறினால் பஸ்ஸில் போவேன். பஸ் டிக்கெட் விலை ஏற்றினால் ஷேர் ஆட்டொ மாறுவேன். திஸ் கண்ட்ரி இஸ் வர்ஸ்ட் ஃபார் லிவிங் என சொல்லுவேன். மனித உயிருக்கு இங்கு மதிப்பே இல்லை என சலித்துக்கொள்வேன். ஆனாலும் ஒரு விபத்தைப் பார்த்துக் கூட என் வாகனம் நின்றிருக்காது. டிராபிக்கை குறை சொல்வேன். ஆனால் சமயம் கிடைக்கும் போது நானும் சிக்னல்கள் மீறுவேன். பின்னால் இருப்பவர்கள் நிற்க விடமாட்டார்கள் என சாக்கு சொல்வேன்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><br />க்ளோபல் வார்மிங்’ஆ? சூரியன் அழிந்துவிடுமா? பூமி மூழ்கிவிடுமா? அதன் முழு கொடுமைகள் ஆரம்பிக்கும் வரையில் நான் உயிரோடு இருப்பேனா தெரியாதே. என் எத்தனாவது தலைமுறை அப்போது இருக்குமோ? அதற்குள் வேறு கிரகத்தில் வாழ கற்றுக்கொண்டுவிடுவார்கள் என அதை டீலில் விட்டுவிடுவேன். மின்சார தட்டுபாடா ? மின்சாரத்தை சேமிக்க எவ்வித வழிமுறைகளையும் கையாளாமல் மின்வெட்டை குறை சொல்லுவேன். இன்வெர்ட்டர் இன்ஸ்டால் செய்து எனக்கு வேர்க்காமல் பார்த்துக்கொள்வேன். எல்லாவற்றிற்கும் உடனடித்தீர்வு ஒன்றைத் தான் என் மனம் தேடும். </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><br />பறவைகள் வாழும் சதுப்பு நிலங்களில், ஏரிகளில் குப்பை கொட்டுவேன். குப்பை நிரம்பி ஒரு குப்பை மேடான பின்பு அதை நிரப்பி ஒரு ப்ளாட் கட்டப்படும். அதிலும் அன்றைய மார்க்கெட்டின் குறைத்த ரேட்டில் ஒன்றை வாங்கிப்போடுவேன். அழிந்து வரும் பறவைகள், காடுகள், மிருகங்கள் குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் என்னிடத்தில் இருந்துவிடாது. என் தலைமுறைக்கு சொத்து என்ன விட்டுசெல்கிறேன் என வருத்தப்படும் அளவுக்குக் கூட எம்மாதிரியான உலகத்தை விட்டுச் செல்கிறேன் என யோசிக்கமாட்டேன். </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><br />என்னைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. என்னை என குடும்பம், சமூகம் வளர்த்திருப்பது இப்படித்தான். கூடங்குளம் பற்றிய ஒரு கவியரங்கத்திற்குப் போகிறேன் என சொன்னதற்கு என் அம்மாவின் குழப்பமான ஒரு பார்வை ஆயிரம் கேள்விகளையும் பயங்களையும் பறைசாற்றும். வர்ரதுக்கு மணி ஆகிடுமா என்பதிலிருந்து யோசிக்கமுடியாத ஒரு புள்ளி வரை அது நீளும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு என் பயாலஜிக்கல் கிளாக் வேலை செய்கிறதோ இல்லையோ அலைபேசி அழைக்க ஆரம்பித்துவிடும். பெண்ணாக இருக்கும் ஒரே காரணம் இவ்வகையான வரையறைகளுக்கு அழுத்தமான நியாயங்களைக் கற்பித்துவிடும்.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><br />இப்படிநாளும் பொழுதும் கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், சராசரித்தனங்களுக்கு அப்பாற்பட்டு சில கருத்துக்களை பதிந்து வைக்க, பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எப்போதும் அதற்காகவே இயங்கி கொண்டிருப்பவர்கள் சொல்வது ஒரு வகையில் புளித்துப்போயிருக்கும் நேரங்களில், சமயத்தில் சராசரிகள் சொல்வது எடுபடக்கூடும். இவனே சொல்கிறானே என்று. அப்படி ஒரு சராசரியின் குரலாக, தொடர்கிறேன்...</div><div style="text-align: justify;"> </div>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-56171693726282076312012-01-26T10:02:00.000-08:002012-01-26T10:12:51.788-08:00சமீபத்தில் படித்தவை<div id=":2gz" class="ii gt"><div id=":2gy"><p><span style="font-size:85%;">2011 படித்த வரிசையின் முதல் சில தாண்டி மீதி இங்கே. <a href="http://kutipaiya.blogspot.com/2011/06/blog-post.html">[1]...</a><a href="http://kutipaiya.blogspot.com/2011/04/blog-post.html"> [2]..</a><br /></span></p><p><span style="font-size:85%;"><b><u>** கோபல்ல கிராமம் - கி. இராஜ நாராயணன்</u></b></span></p><p><span style="font-size:85%;">தம் மண்ணை விட்டு பெயர்ந்து வரும் இன்னொரு இடத்தை தேர்வு செய்து அதை விளைநிலமாகவும் இருப்பிடமாகவும் மாற்றும் ஒரு பெரிய குடும்பத்தினரின் கதை. அழகு தேவதையான தம் வீட்டுப்பெண்ணை விரும்பும் மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் கிளம்பும் அந்த் குடும்பத்தைப் காப்பாற்றும் கடவுளின் செயல்களைச் சொல்லும் 130 வயதான அம்மாள், அவரின் மகன், இன்னுமொரு கதாபாத்திரம் என மூன்று தலைமுறைகளின் வாயிலாக சொல்லப்படும் அவர்களின் வரலாறு. வயதான அம்மாள் சொல்லும் கதைகளில் ஏனோ நம் வீட்டு பாட்டிகளிடம் கதை கேட்கும் உணர்வு.</span></p> <p><span style="font-size:85%;">கதையின் ஆரம்பத்திலேயே நிகழும் ஒரு சம்பவம் - தனியே நடந்து செல்லும் ஒரு பெண் தாகம் தாங்காமல் அருகில் உள்ள ஊருணிக்கு நீரருந்த செல்கிறாள். அவளின் பெரிய பாம்படங்களுக்கு ஆசைப்பட்டு ஒருவன் அவளை தண்ணிக்குள்ளேயே வைத்து அழுத்துகிறான். அவள், அவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவன் கால் கட்டைவிரலை கடிக்கிறாள். அவன் பிடியை விடாமலிருக்கவே மூச்சு திணறி இறந்து போகிறாள். அவள் பிடி இறுகி, அவன் காலை எடுக்க முடுயாமல் தவிக்கிறான். இதை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது அல்லவா ? "சாமி..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ"க்கு இது தான் இன்ஸ்பிரேஷன் போல :) (புத்தகத்தின் முதற்பதிப்பு 1976’ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது)</span></p> <p><span style="font-size:85%;"><b><u>** The Fountain head - Ayn Rand</u></b></span></p><p><span style="font-size:85%;">அய்ன் ராண்ட் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபமாக ஜெயமோகன் தளத்தில் கிளப்பப்பட்ட சர்ச்சையும் அதன் பின்னான வாதங்களையும் அவ்வப்போது கவனித்திருந்த நேரத்தில் இந்த புத்தகத்தின் எலக்ட்ரானிக் காபி கிடைத்தது. முதல் நாள் திறந்து 60 பக்கங்கள் முடித்த நிலையில் நேரே ஃப்லிப்கார்ட் சென்று ஆர்டர் செய்து விட்டேன். தன் கொள்கைகளிலிருந்து மாறாத ஒருவன் பாரம்பரிய முறைகளை எதிர்த்து தன் தொழில்/திறமை ஆன கட்டிடக்கலையில் காலூன்றுகிறான். கல்லூரியில் இவன் வாதத்திற்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கமுடியாத, அவன் எண்ணங்களின் புதுமையையும் புரட்சியையும் ஏற்கமுடியாத ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அவனை கல்லூரியில் இருந்தி விலக்குகின்றனர். அவனோடு படித்த நண்பன், வெற்றிகரமாக படிப்பை முடித்து வெளிவருபவன், தனக்கு காரியம் ஆக யார் காலையும் பிடிப்பவன், என்ன தரத்திற்கும் துணிபவன் என அவனுடைய கதாப்பாத்திரத்திற்கும் கதாநாயகனுக்குமான வாழ்வியல் வித்தியாசங்களை அனாயாசமாக சொல்லிப்போகும் ஒரு நாவல்.</span></p> <p><span style="font-size:85%;">தனக்கான கொள்கைகளை, தன் திறமையை எங்கும் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அவன் பண்பும், கதாநாயகியின் துணிச்சலான காதல், அவள் திறமையும் திமிரும் என இவ்விரண்டு கதாப்பாத்திரங்களின் மேலும், உருவாக்கிய அய்ன் ராண்டின் மேலும் தனி காதலே வந்துவிட்டது. எங்கேயுமே இது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்ற உணர்வே எழுவதில்லை. அவ்வளவுக்கு இப்போதும் பொருந்தி போகக்கூடிய கதைப்போக்கு.</span></p> <p><span style="font-size:85%;"><b><u>** பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - எஸ். ராமகிருஷ்ணன்</u></b></span></p><p><span style="font-size:85%;">'கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்துகொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது. ஏதோவொரு சம்பவத்தையோ, நிகழ்வையோ, கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். சம்பவங்கள், நினைவுகள், சமிக்ஞைகள், உணர்வெழுச்சிகள், அறிந்த அறியாத நிலக்காட்சிகள் தோன்றி மறைகின்றன.'</span></p> <p><span style="font-size:85%;">அருமையாக கட்டமைக்கப்பட்ட, மனிதனின் ஆழ்மனதின் ஆசைகளை, வக்கிரங்களை, வருத்தங்களை சொல்லும் கதைகள். கைக்கண்ணாடியை நண்பனைப் போல் நேசிக்கும் சிறுவன், லேசாக பூனைரோமங்களாலான மீசை முளைத்திருக்கும் சிறுமி, அழகான, தெளிவான முகக்கண்ணாடி ஒன்றை வாங்க ஆசைப்படும் பெண், குடும்பத்தினர் மறந்துவிட்ட பிறந்தநாளைக் தனியாகத் தானே கொண்டாட நினைக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி என நாம் அறியாத கவனிக்க மறந்த பாத்திரங்களின் உணர்வுகள் எஸ் ராவின் வழக்கமான பார்வையில், நடையில் சொல்லப்பட்டிருக்கின்றன.</span></p> <p><span style="font-size:85%;"><b><u>** கள்ளிக்காட்டு இதிகாசம்</u></b></span></p><p><span style="font-size:85%;">விகடனில் வந்த போதே படித்திருந்தது தான். லேண்ட்மார்க்கில் 3 ஃபார் 2 ஆபரில் ஒன்று தமிழ் எடுக்கலாம் என எடுத்தது. உடனே முடித்துவிடவும் முடிந்தது. நினைவில் நின்ற முக்கியமான காட்சி அந்த பிரசவமும், முடிவுப்பகுதியும்.</span></p> <p><span style="font-size:85%;"><b><u>** மீதமிருக்கும் சொற்கள்</u></b></span></p><p><span style="font-size:85%;">1933 முதல் 2004 வரை - பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு. தொகுத்தவர் அ. வெண்ணிலா. என்சிபிஎச் வெளியீட்டில்,ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றிய சிறுகுறிப்பு, புகைப்படம், அவர்கள் எழுதிய சிறுகதைகள் என்று நிறைய உழைத்திருக்கிறார் தொகுப்பாளர். அந்தந்த காலகட்டங்களின் ஊடான பெண்ணின் பார்வைகள், எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், சமுதாயப்பார்வை என ஒரு நூற்றாண்டின் ஊடுருவல். தன் அம்மாவைக் குறித்து சரியாக புரிந்துகொள்ளாமல், ஒரு வகையில் தாயை பிடிக்காமல் கூட வளர்ந்து வரும் மகள், தன் அப்பாவையும் பாட்டியையுமே பெருமையாய் நினைத்து திரியும் நிலையில், மெல்ல வளர வளர தன் அம்மாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள ஆரம்பிப்பது என அழகான கோர்வையை கொடுத்திருக்கும் உஷா சுப்பிரமணியம், சூடாமணி, பாமா போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.</span></p> <p><span style="font-size:85%;"><b><u>** The lost Symbol - Dan Brown </u></b></span></p><p><span style="font-size:85%;">இந்த புத்தகத்தை முடித்ததன் மூலம் இவரின் அனைத்து படைப்புக்களையும் படித்தாகிவிட்டது. டாவின்சி கோட் முதல் இது வரை - எந்த நாவலும் பெரிதாய் ஏமாற்றிவிடவில்லை. படிப்பதில் தொய்வு ஏற்பட்டிருந்த நாட்களில் ஒன்றில், Just to Perk up, இதை எடுத்தேன். ஒரு வார இறுதியிலேயே படித்து முடித்துவிட முடிந்தது கிட்டத்தட்ட 600 பக்கங்களை. துரத்தல்களுக்கு மத்தியில் தப்பித்தல், அதன் மத்தியில் வழக்கமான ஒரு தேடல், புதிர்கள், குறியீடுகள், வரலாறு, மறைக்கப்பட்ட சில உண்மைகள் என அதே ஃபார்மட். ஆனாலும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. ஒரு சாம்பிள் - ஜார்ஜ் வாஷிங்டன் மேசன்கள் எனப்படும் ஒரு சமூகத்தை சார்ந்தவர் எனவும் அவரிம் நம்பிக்கைகளின் படி தான் வாஷிங்டன் நகரின் பல்வேறு கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டன. அதற்குரிய சில வழிமுறைகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டன. அவரை கிரேக்கக் கடவுள் சீயஸைப் போல செய்த சிலை ஒன்று ரகசியம். Google George Washington Zeus and check it yourself!</span></p><span style="font-size:85%;"><b><u>** A Walk in the Woods - Bill Bryson</u></b></span><p><span style="font-size:85%;">The last Continent என்ற பிரபல புத்தகத்தை எழுதியவர். மிதமான நகைச்சுவையுடனும், யதார்த்தமான விவரிப்புகளுடனும், நிறைய சுற்றுப்புற சூழல் மற்றும் காடுகள் சார்ந்த தகவல்களுடனும் ஒரு சுவாரஸ்ய நடை இவரது ப்ளஸ். அப்பலாச்சியன் ட்ரெயில் எனப்படும் அமெரிக்காவின் மிக நீண்ட மலைப்பயணத்தை மேற்கொள்ள அவரும் அவர் நண்பரும் எடுக்கும் முயற்சிகளும் அனுபவங்களும் அவர் சந்திக்கும் மனிதர்களும் என விரியும் அவரது இந்த பயணக் கட்டுரையைப்படித்த பின் நானும் ஏன் எனது ட்ரெக்கிங் அனுபவங்களை( செல்வது அனேகமாக ஒரே இடமாக இருப்பினும் ;) ) எழுதக்கூடாது என்ற விபரீத ஆசை உருவாகிவிட்டது :) ஹிஹி :)</span></p> <p><span style="font-size:85%;">** </span></p><p><span style="font-size:85%;">ஆரம்பித்து முடிக்க அல்லது தொடர முடியாமல் இருப்பவை கொற்கை, ஹோமரின் இலியாத்.</span></p><p><span style="font-size:85%;"> **</span></p> </div></div>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-68779622918583628672012-01-10T08:01:00.000-08:002012-01-15T04:54:08.127-08:00தனுஷ்கோடி சொல்லும் பாடம் என்ன?<div style="text-align: justify;"><div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR_7Ep2wgs8BRq1ZtLvbs2-SXtUKC6bng2Hc4EwUtAqunCjSfBX25ZeDehRIiXgHVj05uYbOrRhdaVHMmGdwJiut3qO0wKJSUukhb38b-Yyfgon06soQMavGGH7lipg1olD9cIbPTrueQ0/s1600/IMGP4383+copy.jpg"><img style="cursor: pointer; width: 401px; height: 318px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR_7Ep2wgs8BRq1ZtLvbs2-SXtUKC6bng2Hc4EwUtAqunCjSfBX25ZeDehRIiXgHVj05uYbOrRhdaVHMmGdwJiut3qO0wKJSUukhb38b-Yyfgon06soQMavGGH7lipg1olD9cIbPTrueQ0/s400/IMGP4383+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697146145514312690" border="0" /></a><br /></div><span style="font-size:85%;"><br />கடந்த சில ஆண்டுகளாகவே புதுவருடம் எப்போதும் வீட்டில், தூங்கத் தயாரான நிலையில், சன் டிவியில் பட்டாசு வெடிப்பதைப் பார்த்துத் தான் ஆரம்பித்துக் கொண்டிருந்தது! இவ்வருடம் HBO’வில் Inception படம் பார்த்து! ஆனால் இடம் தான் கொஞ்சம் வித்தியாசம். நண்பர்களுடன் முதல் முறையாக இராமேஸ்வரம். இராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி ஆர்வம் தான் இப்பயணத்தில் இணைவதில் என்னை செலுத்தியிருக்கக்கூடும்.<br /><br /></span><div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9qxZ614FnNLHgQtfv7_LVTKHKzBEHCHCFRC191OUXfYeyH-iz3tytzyu9ssaLV5bvkjgRD-jkQUHEYgOv81o426NNi0Lz8KMKNSPJaRW-GvsEdmUzPRWW9L5MK1B03zr5LSxfH7oMFDWI/s1600/IMGP4489.JPG"><img style="cursor: pointer; width: 368px; height: 264px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9qxZ614FnNLHgQtfv7_LVTKHKzBEHCHCFRC191OUXfYeyH-iz3tytzyu9ssaLV5bvkjgRD-jkQUHEYgOv81o426NNi0Lz8KMKNSPJaRW-GvsEdmUzPRWW9L5MK1B03zr5LSxfH7oMFDWI/s400/IMGP4489.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697153598094435122" border="0" /></a><br /></div><span style="font-size:85%;"><br />தனுஷ்கோடி பார்க்கவேண்டுமென்பது உண்மையிலேயே வெகுநாள் திட்டமாக இருந்தது. வருடத்தின் ஆரம்பத்தில் தேசாந்திரி படித்துக்கொண்டிருந்த போது, அதில் வரும் ஒவ்வொரு இடங்களையுமே ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஒரு வேகம் வந்தது. அதில் முக்கியமானது தனுஷ்கோடி. காரணம், அடிக்கடி சென்று வரும் எங்கள் ஊரிலிருந்து சில மணி நேர தொலைவில் தான் இருந்தது அது. அவ்வளவு அருகில் இருந்துகொண்டும் இவ்வளவு நாட்களாக பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மேலோங்க, அடுத்த தடவை ஊருக்கு செல்லும்போது கண்டிப்பாக சென்றுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை அம்மாவிடம் அது பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் சிறுவயதில் ஊருக்கு வந்து தனுஷ்கோடி நிகழ்வைப் பற்றி பாடுவார்கள் எனவும் அது அவ்வளவு சோகம் நிறைந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். அந்த காலத்தில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகப்பிரதானமாக இருந்ததும் வாய்மொழியாகவே மக்கள் இது பற்றி அறிந்ததும் பற்றி சொல்லி மேலும் ஆர்வத்தை கிளப்பிவிட்டார். ஏப்ரல் மாதத்தில் ஒரு வார விடுமுறையில் ஊருக்கு போய்விட்டு அப்படியே அங்கே செல்லலாமெனவிருந்ததை வெயில் கருதி கொடைக்கானல் மாற்றவேண்டியதாயிற்று. இந்த தடவையும் இப்படி அப்படி என்று கடைசி நிமிடம் வரை அலைமோதி தான் பயணத்தில் சேரும்படி ஆனது. இராமேஸ்வரத்தில் முந்தைய இரவு இறங்கியதுமே இனம் புரியாத ஒரு உணர்வு தொற்றிகொண்டது. தனுஷ்கோடி என்னை அழைத்திருப்பது இப்போது தான் என நினைத்துக்கொண்டேன்.<br /><br /></span><div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYPPTmcXR5nN03UQptGvqWhuOgPyKeHxw6O-mEllMl0g0tFvoyhbHQzyNKk1xWlntRJETfmc-iP3QlTMrtPSnq6xPaUwHb13GrgL12s1r5CQ_I5uc0f8kWZS_0dS6DCjV__-6bvtueJMI6/s1600/IMGP4436+copy.jpg"><img style="cursor: pointer; width: 379px; height: 276px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYPPTmcXR5nN03UQptGvqWhuOgPyKeHxw6O-mEllMl0g0tFvoyhbHQzyNKk1xWlntRJETfmc-iP3QlTMrtPSnq6xPaUwHb13GrgL12s1r5CQ_I5uc0f8kWZS_0dS6DCjV__-6bvtueJMI6/s400/IMGP4436+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697152605713779634" border="0" /></a></div><span style="font-size:85%;"><br />தனுஷ்கோடி கடலில் இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தைப் பார்த்துவிடலாம் என அதிகாலையிலேயே சென்றுவிட்டோம். முகுந்தன்சத்திரம் என்ற அந்த ஒரு இடம் வரை தான் வாகனங்கள் செல்ல முடிகிறது. அதன் பின் நீளமான ஒரு மணல் திட்டு தான். இருபுறமும் கடலைப் பார்த்தபடியே நடக்கும் அந்த அனுபவம், ஒரு புறம் மட்டுமே கடல் பார்த்து நடந்த நம் கிழக்கு கடற்கரைச் சாலை அனுபவங்களை முற்றிலும் கேள்விக்குறியாக்கிவிட்டு, விசித்திரமானதொரு காட்சிப்பிழை போல தோற்றம் தருகிறது. அந்த அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு இருக்கும் ஒரு மெல்லிய சிவப்பு படர்ந்த ஒரு வசீகர ஒளியில் கடல் மின்னுவது அதற்கு இன்னமும் வலு சேர்க்கிறது.<br /><br />அலைமோதும் கரை ஒருபுறம். அலைகளற்ற தேங்கி நிற்கும் நீர் கடலோடு இணையும் ஆரவாரமற்ற மற்றொரு புறம். நடுவில் கிழக்கில் எங்கள் கவனத்தை செலுத்தியபடியே மெல்ல கால்புதைய நடந்துகொண்டிருக்கும் நாங்கள், இந்த இடம் தான் உள்ளே நிஜமான தனுஷ்கோடி வரை செல்ல வாகனங்கள் கிடைக்கும் இடம். எங்களைத் தாண்டி அப்போதே ஒன்றிரண்டு ஜீப்புகள் சென்றன. தேங்கி நிற்கும் கரையோரமே நீரைக் கிழித்துக் கொண்டு அவ்வாகனங்கள் சென்றதை பார்க்கும் போது உண்மையாகவே வியந்து தான் போனேன். இப்படி ஒரு பயணம் அதற்குள்ளாக இருக்குமென நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. ஆச்சரியம் தீர்வதற்குள்ளாகவே சூரியனும் லேசாக எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டதால் எல்லோரும் அதைப் படம்பிடிப்பதில் ஆர்வமானோம். குறிப்பிட்ட தூரம் வரை சூரியன் ஏறும் வரையில் அங்கேயே இருந்த பின், வண்டிகள் இருந்த இடத்திற்கு திரும்பினோம். புது வருடத்தில் இராமேஸ்வரம் தீர்த்தமாடவும் இராமலிங்கத்தை தரிசிக்கவும் சில நண்பர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். இராமலிங்கர் மன்னிக்க, நாங்கள் மட்டும் தனுஷ்கோடி உள்செல்வதாய் தீர்மானித்தோம். ஜீப்புகள் எல்லாம் அந்நேரத்தில் கிளம்பிவிட்டிருந்தன. எங்களுக்காக ஒரு டெம்போ வேன் காத்திருந்தது. இரு புறமும் பெஞ்ச் செட் செய்து ஒரு பெரிய ஸ்கூல் ரிக்ஷா போல காட்சியளித்தது.<br /></span><div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0WEKUQvSJsnwWvDu7CcXvbHoV232_bISKxkDPxl7UL8WxsteKA2_bzFNWLpLE7E0EcbrSmr7-TJSgzIMngsgejupewX8qS4LW5tmLHFTjpzdxnlaq26ERi7TMZa2F9hOUhbBxkqgYl4A_/s1600/IMGP4495+copy.jpg"><img style="cursor: pointer; width: 368px; height: 248px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0WEKUQvSJsnwWvDu7CcXvbHoV232_bISKxkDPxl7UL8WxsteKA2_bzFNWLpLE7E0EcbrSmr7-TJSgzIMngsgejupewX8qS4LW5tmLHFTjpzdxnlaq26ERi7TMZa2F9hOUhbBxkqgYl4A_/s400/IMGP4495+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697147541564164802" border="0" /></a></div><span style="font-size:85%;"><br />காலையில் பார்த்து வியந்திருந்த அதே பாதையில் பயணித்தோம். ஷோர்வாக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன ஷோர்டிரைவ்?! ஒரு 5-6 கி.மீ அப்படியே பயணித்து ஒரு காலத்தில் தனுஷ்கோடியின் பிரதான இடத்திற்கு வந்து சேர்ந்தோம். செல்லும் வழியிலேயே முட் செடிகளும், அவை மூடிய வீடுகளும், அரித்துப்போன அந்த சுவர்களும் கடல் பறவைகளும், கழுகுகளும் ஒரு வினோத உலகத்தில் நாம் சென்றுகொண்டிருக்கும் உணர்வைத் தருகின்றன. இறக்கிவிட்ட இடத்தில் நின்ற மூன்று பெரிய தூண்கள் நம்மை வரவேற்கின்றன. அலையோசை ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எங்கும் இருப்பதை விட அவை அங்கே இன்னும் சோகமாக, வேகமாக இருப்பதைப் போல் ஒலிக்கின்றன. அந்த காலத்திலேயே அவ்வளவு பெரிய பள்ளிக்கூடம், வங்கி, தபால் நிலையம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய ஒரு பெரிய கட்டிடம் எலும்புக்கூடுகளைப் போல் நிற்கிறது. மூழ்கிப்போன தண்டவாளங்களையும் கூரைக்கான தூண்களையும் கொண்டு ஒரு இரயில் நிலையம் இருக்கிறது. மொத்தத்தையும் விழுங்கிவிட்டு அதே போல் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் அக்கடலும் எத்தனைப் பேரை தன்னுள் புதைத்துக்கொண்டு அமைதியாய் இருக்கும் கரைமணலும் நமக்கு என்ன சொல்ல காத்திருக்கின்றன? நிலைகொள்ளாத கேள்விகளுடன் மேலும் நடக்க, அந்த தேவாலயம் வருகிறது.<br /></span><div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLB3yxbnokW2IzJeXpefJVojzKnGAqnhyphenhyphenjMI8Hv1TEbrvzhh99vy1MuV8ptWOg1t2gMTyw-9r1C_QRBqFtkDq87mjaPncwIbC0QKADUZlprg0tbW3IZ-gPd1bJE-eW51Wd2wmEBbQ87zHo/s1600/IMGP4531.JPG"><img style="cursor: pointer; width: 359px; height: 258px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLB3yxbnokW2IzJeXpefJVojzKnGAqnhyphenhyphenjMI8Hv1TEbrvzhh99vy1MuV8ptWOg1t2gMTyw-9r1C_QRBqFtkDq87mjaPncwIbC0QKADUZlprg0tbW3IZ-gPd1bJE-eW51Wd2wmEBbQ87zHo/s400/IMGP4531.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697148752146768706" border="0" /></a></div><span style="font-size:85%;"><br />அழிவிலும் அதற்கு ஒரு அழகு இருக்கிறது. அதன் வாசலில் நின்று பார்க்கிறேன். எத்தனை ஆராதனைகளைக் கண்டிருக்கும் இந்த மேடை? எத்தனை மக்களை, எவ்வளவு பிரார்த்தனைகளை, பாவமன்னிப்புகளை பார்த்திருக்கும் ? புயல் வெள்ளத்தின் போது எத்தனை பேர் இங்கே வந்து அடைக்கலம் புகுந்திருப்பார்கள் ? அந்த பிரார்தனைகளும் மணியோசைகளும் அந்த காற்றில் தானே கரைந்திருக்கும் ? இயேசுவோ இராமரோ இயற்கையில் இருந்து ஏன் இந்த மக்களைக் காப்பாற்றவில்லை ? இறுகிய மனதுடன் சிறிது நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னமும் அங்கே சில குடும்பங்கள் வாழ்கின்றன. அங்கேயே கடை வைத்து சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழும் சிலரும் மீன்பிடிக்கும் சிலரும். அவ்வளவு பெரிய ஒரு அழிவிற்கு பின்னும் எது அவர்களை அங்கேயே இருக்க வைக்கிறது?<br /></span><div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1GfhRnkAIFDIMsbcRg1rMhW7opPBqeSjzMHszTqY397lGdWG2zK1vnsigsoIl7jCmDPy-8z00aqlGg8KT9GsgoLWfUihnTd7NowOwpn0mmGowlWVJWgcVbom1FhbNpnP48m59KcxZyoQF/s1600/IMGP4537.JPG"><img style="cursor: pointer; width: 349px; height: 262px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1GfhRnkAIFDIMsbcRg1rMhW7opPBqeSjzMHszTqY397lGdWG2zK1vnsigsoIl7jCmDPy-8z00aqlGg8KT9GsgoLWfUihnTd7NowOwpn0mmGowlWVJWgcVbom1FhbNpnP48m59KcxZyoQF/s400/IMGP4537.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697150069662311602" border="0" /></a><br /></div><span style="font-size:85%;"><br />ஒரு வருடத்தை இந்த சிதிலங்களிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். என்னை செலுத்தியது என்ன ? தனுஷ்கோடி எனக்கு சொல்லவிரும்பும் பாடம் என்ன? கேள்விகளுடன் கிளம்புகிறேன். திரும்பிவரும் வழியில், தண்ணீர் வேண்டுமென அழுத ஒரு குழந்தை ‘அங்க பாத்திய்யா எவ்ளோ தண்ணி’ என தாய் கடலைக் காட்டி சமாதானப்படுத்தியதும் வேடிக்கைப்பார்த்து புன்னகைக்க தொடங்கிய நொடியில் கிடைத்தது விடை. வாழ்க்கை என்பது அந்த நிமிட வரம். வருத்தங்களையோ வெறுப்புகளையோ சுமந்தலைய மிகுந்த பிரயத்தனப்படும் நேரங்களில் தூரத்தில் நமக்கான சில சந்தோஷ நிமிடங்கள் மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறது. வாழும் வரை போராடு என்பதை விட வாழும் வரை கொண்டாடு என்பதே சரி என நினைக்கிறேன். நினைத்ததை, பிடித்ததை செய். நீயாய் இரு. நிறைவாய் இற. With No Regrets!</span></div>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-47587917447714993092011-09-22T09:16:00.003-07:002011-09-22T09:33:50.355-07:00காகிதப்பூக்களின் நிறமெழுதும் வாசம்…[1]<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_lI1-6DsNfg666-zaGGxX_wWEVKrxRllHLfLep74y-u64tx-xKUXKqPuG0tzEsCVujrxUKFFYh-iyN1AsSDJRS6X0-i3DfscOj7Ns5ubPnNONjRg6-KPoAWrIp2npyNKSTMKkkyW0N1Jl/s1600/dsc_0217-217.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 542px; height: 276px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_lI1-6DsNfg666-zaGGxX_wWEVKrxRllHLfLep74y-u64tx-xKUXKqPuG0tzEsCVujrxUKFFYh-iyN1AsSDJRS6X0-i3DfscOj7Ns5ubPnNONjRg6-KPoAWrIp2npyNKSTMKkkyW0N1Jl/s320/dsc_0217-217.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5655222308867983218" border="0" /></a><p><span style="font-size:85%;">நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது.</span></p> <p><span style="font-size:85%;">பேசி பேசித் தீர்த்த பொழுதுகளின் வாசம் மெல்ல காற்றில் கரைந்துகொண்டிருக்கிறது. அதை தக்க வைக்க என்னாலானதை முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் ஒரு மெளனச்சுவர் மெல்ல எழும்புகிறது. என்னை மீறி இடமற்ற, யாரும் உள்நுழைய முடியாத கூடாய் அது உருவாகிறது. மகிழ்ச்சியாய் அதனுள் சிறைப்பட எத்தனித்து கொண்டிருக்கிறேன். மெளனமும் இருளும் தனிமையும் கொண்டு அதனை நிரப்புகிறேன். மெளனம் அனைத்திற்கும் தீர்வாக இருக்கும் என நம்புகிறேன். அதுவும் தவறு தான் என உடைத்துப் போகிறாய்.</span></p> <p><span style="font-size:85%;">வார்த்தைகளற்ற பெருவெளி ஏதோ ஒன்றில் அறியாமல் நாம் சிக்கிக்கொண்டிருக்கவேண்டும். உன்னை நோக்கி குவிந்த வார்த்தைகள் எங்கேயோ விரைந்து மறைகின்றன. ஆடம்பரமாக்க பட்ட வார்த்தைப்பெருவெளிகளில் பஞ்சத்தில் அடிபட்ட ஏழ்மையின் குடியாக மாறிக்கொண்டிருக்கிறோம். உறியில் மிச்சம் இருக்கும் ஒன்றிரண்டு அரிய சொற்களும் பரிதாபமாக கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. உணர்வுகளையும் வருத்தங்களையும் கோபங்களையும் ஓரிரு சத்தங்களில் வெளிக்காட்டுவதோடு நம் பரிமாற்றங்கள் முடிவடைந்துக்கொண்டிருக்கின்றன.</span></p> <p><span style="font-size:85%;">புன்னகைகளும் உற்சாகங்களும் ஊற்றெனப் பெருக்கெடுத்து ஓடிய காலங்கள் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்த செல்கள் மீண்டும் மரணிக்கத் தொடங்கிவிடுவதைப் போல கூக்குரல் இடுகின்றன. உயிர்ச்சூடளித்து என்னை அடைகாத்த அடர்ந்த கருஞ்சிறகுகளின் இறகுகள் மெல்ல உதிர்ந்துவிடுவதைப் போல ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. பின்னிப் பிணைந்த பாம்புகளைப் போல் கிடந்த நம் பாதச்சுவடுகளின் பாதை தண்டவாளங்களைப் போல் தனித்தனியாய் நீண்டுகொண்டிருக்கிறது. காதலாய் நிகழும் சந்திப்புகள் சலிப்பிற்குரிய கடமைகளாய் மாறத்தொடங்குகிறது. சிரிப்புக்களை இடம் மாற்றிவிட்டு சலிப்புக்களும் வெறுப்புகளும் கோபங்களும் குடிகொள்ளத் தொடங்கிவிட்டன.</span></p> <p><span style="font-size:85%;">கட்டி எழுப்பப்பட்ட எனது கனவு தேசங்கள் அனைத்தும் கேள்விக்குறிகளாய் மாறுகின்றன. அதன் கூரிய வளைவுகளில் என் கழுத்தைச் சுற்றி கருணையே இல்லாமல் என்னை இழுத்துப் போகின்றன. மிகுந்த அலறல்களின் இடையில் என்னை பள்ளாத்தாக்கின் மேலிருந்து விடுவிக்கின்றன. விழுந்து கொண்டே இருக்கையில் விழிக்கிறேன். விழித்து விழித்து பின் மீண்டும் வீழ்கிறேன்.</span></p> <p><span style="font-size:85%;">தேவதைக்கதைகளில் வரும் ஏழுகடல்கள் ஏழுமலைகள் தாண்டி இருக்கும் அரக்கனின் காவலில் உள்ள கிளியின் உயிரை போன்றதாகிவிட்டது நம் பிரியங்கள். அரியது போல, மிக மிக வேண்டப்பட்டது போல, பல போர்களை தூண்டும் வேட்கை போல, மனிதத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் மெல்லிய வன்மங்களைப் போல, இடம் மாறினாலும் நிறம் மாறினாலும் அடையாளம் மாறாத அதே பிரியங்கள். எங்கேனும் யாரேனும் பரிசளிக்கும் ஒரு மந்திர வாளோ பறக்கும் மந்திர கம்பளமோ கிடைத்துவிடாதா சிறைப்பட்டிருக்கும் என் பிரியத்துக்குரிய நேசங்களை மீட்க என்ற ஏக்கத்துடன் கூடிய மெல்லிய நம்பிக்கையின் ரேகை ஒன்று ஆயுள் ரேகையை தாண்டிச் செல்கிறது என் உயிர்த்திருத்தலின் நோக்கங்களை எடுத்துக்கூறியபடி.</span></p> <p><span style="font-size:85%;">வேறு வேறு கூடுகள். வேறு வேறு எல்லைகள். தொடுவானங்கள் அவரவர் திசைகளிலும் வெவ்வேறு தூரங்களிலும். எனினும் ஒரே உலகத்தில் தானே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது நம் உடல்களும் உயிரும். அதுவும் நமக்கு மட்டுமேயான உலகமாய் மாறிவிடும் என்ற கனவுகளுடன் இப்போது கலைந்து போகிறேன்.</span></p> <p><span style="font-size:85%;">நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது…</span></p>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-8818043496906934112011-06-14T08:13:00.000-07:002011-06-14T08:21:44.420-07:00சமீபத்தில் படித்தவை<p><span style="font-size:85%;">யுவனின் வெளியேற்றம் தான் இந்த வருடத்தில் நான் படித்த முதல் புத்தகம். அதற்கு முன்பே ஒன்றிரண்டை ஆரம்பித்து தொடர முடியாமல் போய் தான் வெளியேற்றத்திற்கு வந்தேன். அதை முடிக்கவே மார்ச் ஆகிவிட்டது .</span></p> <p><span style="font-size:85%;">அதன் பின்னர் படித்தவை இங்கே. இடையில் நீராலானது- மனுஷ்ய புத்திரன், , தேசாந்திரி-எஸ்.ரா (இரண்டாம் முறை) இரண்டும் அடங்கும். இவை இரண்டிற்கும் பெரிதாக அறிமுகம் தேவையில்லாத காரணத்தினால் கொடுக்கவில்லை <img src="https://ch1blogs.cognizant.com/blogs/224364/wp-includes/images/smilies/icon_smile.gif" alt=":)" class="wp-smiley" /></span> </p> <p><span style="font-size:85%;"><strong><u>மஞ்சள் வெயில் - யூமா வாசுகி</u></strong></span></p> <p><span style="font-size:85%;">யூமாவின் ரத்த உறவு படித்திருக்கிறேன்(இதைப் பற்றி தனியாக எழுதவேண்டும் என வெகு நாட்களாக எண்ணம்) . அவரின் எழுத்தில் விரியும் அந்த வினோத உலகத்தின் மாயை. அவரின் கவிதைகளும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். மஞ்சல் வெயில் - மிகச்சிறிய ஆனால் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் நீங்காத ஒரு நாவல். ஜீவிதா என்ற அந்த கதாப்பாத்திரத்தின் மீது படிப்பவர் எவருமே காதல் கொள்ளத்தான் வேண்டும். கதாநாயகனின் ஒரு தலைக்காதல், அவளின் எல்லா செயலகளையும் காதலென புரிந்து கொள்ளுதல். கதை மொத்தத்தையுமே காதலிக்கான கடிதமாக, தீராத காதலின் வடிகாலாக, தோல்வியின் உணர்ந்து கொள்ளலாக, காதலை பொழிந்து யூமாவின் மந்திரச்சொற்களால் நிரம்பியிருக்கிறது, கிறங்க வைக்கும் மஞ்சள் வெயில். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.</span></p> <p><span style="font-size:85%;">அகல் பதிப்பகம் - ரூ 65 - பக்கங்கள் -134</span></p> <p><span style="font-size:85%;"><strong><u>மறுபக்கம் - பொன்னீலன்</u></strong></span></p> <p><span style="font-size:85%;">சாகித்ய அகாடமி விருது பெற்ற, மார்க்ஸீய அடையாளம் உள்ள எழுத்தாளர் பொன்னீலன் அவர்களது மறுபக்கம் நாவல், 1982 ஆம் ஆண்டு நடந்த தென்மாவட்ட கலவரமான ‘மண்டைக்காடு கலவரம்’ குறித்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரள எல்லை கிராமங்கள் இடையேயான உறவுகள், மீனவர் மற்றும் மற்ற சாதியினர் இடையேயான உறவு, வேர் விட ஆரம்பித்திருந்த கிறித்துவ மதம், அதை முறியடிக்க ஆர்.எஸ்.ஏஸ்’ன் முயற்சிகள், சிறுதெய்வங்கள், நாட்டுபுற கடவுளர்களையும் திரித்த வடநாட்டு தெய்வங்களின் நுழைதல் எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டு செல்கிறது கதைப்போக்கு. தமிழ்நாட்டு வரலாற்றில் ஆர்வம் உடையவர்கள் படிக்க வேண்டிய நாவல். அவ்வப்போது தூவப்பட்டிருக்கும் சில புரட்சிக்கருத்துக்களும் பெண்ணியமும் ரசிக்க வைத்தவை. உண்மை சம்பவங்களின் கோர்வை - நீண்ட விஷயங்களை சொல்வதினாலொ என்னவோ கொஞ்சம் மெதுவாகத் தான் நகர்கிறது. சில நாட்கணக்கில் நாவல்களை முடித்துவிடும் காலத்தில், விஷயங்களை சேகரிக்கவும், நாவலை உருவாக்கவும் வருடக்கணக்கில் உழைத்திருக்கும் ஆசிரியருக்கு தாழ்மையான வணக்கங்கள்.</span></p> <p><span style="font-size:85%;">நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - ரூ. 375 - பக்கங்கள் - 750</span></p> <p><span style="font-size:85%;"><strong><u>The dreamseller - the calling - Augusto Cury</u></strong></span></p> <p><span style="font-size:85%;">இதுவும் ஒரு மாதிரி alchemist வகை. ஆனால் அதைப் போன்ற ஒரு ஃபேண்டசி தளமாக இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வது போல இயல்பான தளம். உலவும் கதாப்பாத்திரங்கள் போல நாம் என்றேனும் சிந்தித்திருப்போம். அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றும் நாம் சிந்திப்பதற்காக கேட்கப்படுபவை. இயந்திர மயமாக, உலகத்தனமாகவே ஒடி/ஓட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் Priorities என்ன என யோசிக்கவைக்கிறது. தொலைத்த கனவுகளைத் தேடச்சொல்லும் வார்த்தைகள். inspiring and motivating.</span></p> <p><span style="font-size:85%;">Simon & Schuster Co, UK - ரூ 479, பக்கங்கள் - 246</span></p> <p><span style="font-size:85%;"><strong><u>காலம் ஆகி வந்த கதை - இரவி அருணாச்சலம்</u></strong></span></p> <p><span style="font-size:85%;">நண்பரின் பெட்டியில் இருந்த புத்தகத்தைப் பார்த்து வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என கேட்டு வாங்கிக் கொண்டு வந்து சில மாதங்கள் கழித்துத் தான் படித்திருக்கிறேன். சத்தியமாக அது வரை அது ஈழப்பின்புலம் சார்ந்தது என யோசிக்கக் கூட இல்லை. முழுவதும் அவர்களின் அழகிய தமிழில். மிக அருமையாக, கதை சொல்லியின் பிள்ளைப் பிராயத்தை ஒரு மாதிரி கோர்வையான நிகழ்வுகளால் சொல்லியிருக்கிறது. அதன் மூலம் காட்சியில் விரியும் அந்த அழகான கிராமம், குடும்பம், பாசப்பிணைப்பு, அவர்களின் ஆடு, மாடு , கோழி போன்றவை, கோயில், குலதெய்வம் என அவ்வளவும். இத்தனையும் இப்போது இருக்காதே என்ற வருத்தம் படிக்கும் போதே சூழ்ந்து கொள்கிறதுவெகு சில இடங்களில் மட்டுமே அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் வருகிறது.. கதையில் திருப்பம் என எதுவும் இல்லை. ஆனால் படிப்பதை நிறுத்த முடியவில்லை. இன்னொரு முறை படித்தால் வேறு பரிமாணம் கிடைக்குமோ என்னவோ. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.</span></p> <p><span style="font-size:85%;">விடியல் பதிப்பகம் - ரூ 80, பக்கங்கள் - 224</span></p> <p><span style="font-size:85%;"><strong><u>முன் சென்ற காலத்தின் சுவை - செந்தில்குமார்</u></strong></span></p> <p><span style="font-size:85%;">ஆசிரியரைப் பற்றி பெரிதாக கேள்விப்பட்டிராததால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தான் ஆரம்பித்தேன். கவிதைகள் உருவாக்கிய ஒர் தனி உலகிற்குள் அழைத்துச் செல்லும் வரிகள். உருவங்களுக்கும் உருவின்மைகளுக்கும் இடைவெளியில் நிகழும் சிறுபொழுதுகளை வரிகளாக்குகிறார் என்று சொல்லும் பின்னட்டை வாசகம் தான் எவ்வளவு உண்மை! உருவம் சார்ந்த உருவின்மைகளும் உருவமற்ற உருவங்களும் உருவாக்கும் புதிய கவிதை உலகத்தில் கருணையும் கழிவிரக்கமும் அனுதாபம் கலந்த ஈரமும் நிரம்பியிருக்கிறது.</span></p> <p><span style="font-size:85%;">காலச்சுவடு பதிப்பகம், ரூ 75, பக்கங்கள்- 95.</span></p>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-35249231908347459972011-04-01T05:58:00.001-07:002011-04-01T10:33:16.484-07:00யுவன் சந்திரசேகரின் ’வெளியேற்றம்’ நாவல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwwjOFO3QrCJISPT2SDB6846T-gVugEw1QWlzCgpe2MJrV1mUDgSxsc0eWU8ywnMa-DM5RaI9aJ3tvFStbLwU7AGO-ukNdsOMQqJK8Qav8joqAV_ovfGOHm5mZNzJSWqyzYumdsZoP5k2s/s1600/veliyetram.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 201px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwwjOFO3QrCJISPT2SDB6846T-gVugEw1QWlzCgpe2MJrV1mUDgSxsc0eWU8ywnMa-DM5RaI9aJ3tvFStbLwU7AGO-ukNdsOMQqJK8Qav8joqAV_ovfGOHm5mZNzJSWqyzYumdsZoP5k2s/s320/veliyetram.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5590666791958795794" border="0" /></a><span style="font-size:85%;">அந்த ஒரு கணத்தை எல்லாரும் கட்டாயம் கடந்து வந்திருப்போம். எல்லாத்தையும் விட்டுவிட்டுப் போய்விடலாம், எதுவுமே தேவையில்லை என யோசிக்கும் ஒரு கணம். என்ன வாழ்க்கை இது என யோசிக்கும் ஒரு கணம். தனியே பிரயாணித்துக் கொண்டிருக்கையில் இறங்குமிடமே வராமல் அப்படியே பயணம் தொடர்ந்து கொண்டே இருக்காதா என ஏங்கும் ஒரு கணம். பறவையைப் போல எந்தக் கட்டுப்பாடுகளும் கடமையும் இல்லாமல் பறந்து திரிய நினைக்கும் ஒரு கணம். எல்லாவற்றில் இருந்தும் வெளியேறி வெறுமையாய்த் திரிய வேண்டும் என விரும்பும் ஒரு கணம்.<br /><br /></span><span style="font-size:85%;"></span><span style="font-size:85%;"></span><span style="font-size:85%;">"வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன." என்ற பின்னட்டையின் வாசகமும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என ஈர்த்ததில் தன் பங்கைச் செய்தது.<br /><br /></span><span style="font-size:85%;">மேற்சொன்ன வெளியேற்றங்களுக்கு அப்பாலும் வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அதை, அவரைச்சுற்றிப் படிந்திருக்கும் பல பேரின் கதைகளைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதி முழுக்க தனித்தனி இழையாக ஒவ்வொருவரின் கதைகள் ஒவ்வொரு அத்தியாயமாக வருகின்றன. பின்பாதியில் அத்தனைக்கும் குறுக்கில் இழைகளைக் கோர்த்து அவை பின்னிப் படரும் புள்ளிகளைப் பார்வைக்கிடுகிறார் யுவன். மெல்ல கட்டவிழ்கிறது ஒரு பெரும் மனிதரின் கதை. அவரைச் சுற்றி அவரைப் பற்றி அறிந்த அவரால் ‘வெளியேற்றப்பட்ட’, அவரின் அற்புதங்களைச் சந்தித்த மனிதர்களின் கதைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.<br /><br /></span><span style="font-size:85%;">பயணங்களில் சந்திக்கும் சுவாரஸ்யமான பக்கத்து இருக்கைக்காரரின் பேச்சு போல மிக இயல்பாய் பயணிக்கிறது ஒவ்வொருவரின் கதையும். தொடர்ந்து வந்த நிறைய கதாபாத்திரங்களினால் எனக்கு ஒரு சில இடங்களில் யாரின் கதை என்னது என பிற்பாதியில் நினைவு கொள்வதற்குத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது போலும்.<br /><br /></span><span style="font-size:85%;">40வயதைக் கடந்த ஒருவர் ஒரு கல்யாணத்திற்காய் தனியாய் பயணம் செய்கையில் சந்திக்கும் ஒரு நபரின் கதை அவரிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறது. மிகச் சராசரியாய் ஒரு எல்.ஐ.சி. முகவராய் இருந்து, திருமணம், இரண்டு குழந்தைகள், நாற்பது வயதில் ஒரு சொந்த வீடு என பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்த அவருக்கு தான் சந்தித்த நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மிக அதியசமாகவும் ஈர்க்கும்படியாகவும் இருக்கின்றன. அதன் பின்புலத்தில் இருப்பவர்களையும் அவர்களின் அனுபவங்களையும் அத்தனைப்பேரையும் இன்று சேர்க்கும் புள்ளியையும் தேடிச்செல்கிறார். இதுவே நமக்கு இரண்டாவது பாதியில் தான் புலப்படுகிறது.<br /><br /></span><span style="font-size:85%;">ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதம். எத்தனை வட்டார வழக்குகள், பழக்கங்கள், மொழிகள், இடங்கள்! அவர் கேட்கும் கதையை நாமும் பக்கத்தில் இருந்து கேட்பது போன்ற உணர்வு. பக்கத்து வீட்டு மனிதர்களைப் போன்ற எளிமை, ஒவ்வொரு கதாபாத்திரத்தினிடமும். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான அனுபவங்கள் வேதமூர்த்தி என்ற பெரியவருடனானதே. அவர் இவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தெளிவு, காட்டிய வழி, நிகழ்த்திய அற்புதம் என ஒவ்வொன்றும் ஒரு வகை.<br /><br /></span><span style="font-size:85%;">ஒரு கதையில் தனக்குப் பெண்சீக்கு வந்ததாய்க் கூறி ஒரு வைத்தியரிடமிருந்து திரும்பி வருகிறான் ஒருவன். இனி வாழ்க்கையே அவ்வளவு தான் என நினைக்கிறான். வரும் பாதையில் தண்டவாளங்களைத் தாண்ட நேருகையில் ரயிலில் பாய்ந்து உயிர் விட்டுவிடலாம் என யோசிக்கிறான். எல்லாவற்றில் இருந்தும் இந்த உடம்புக்கு விடுதலை, உடம்புக்குத் தானே எல்லாம், உயிருக்கு ஏது எனக் கூறும் அந்த சில வரிகளில் மரணத்தின் ஒருவித வசீகரத்தை உணர்வது உண்மை.<br /><br /></span><span style="font-size:85%;">மரணத்தின் பின், பிறப்பிற்கு முன்னான உலகம், ஜென்மங்கள், ஜீவசமாதி, பல தத்துவங்கள், அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என இவற்றைப் போன்ற விஷயங்களில் பெரிதான நம்பிக்கை இல்லாத என்னைப் போன்ற ஒருவரையும் இயல்பாக சுவாரஸ்யமாகப் படிக்க வைத்ததே இந்நாவலின் வெற்றி எனக்கூறலாம். முக்கியமாக, முன்னுரை இல்லாத இந்த நாவலின் பின்னுரை கூறுவது, கூறப்பட்ட அத்தனை மாயநிகழ்வுகளும் உண்மை என்பதே!!<br /><br /></span><span style="font-size:85%;"></span><span style="font-size:85%;">வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்<br /></span><span style="font-size:85%;">உயிர்மை பதிப்பகம்<br /></span><span style="font-size:85%;">ஆன்லைனில் வாங்க: </span><a href="http://www.uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=256"><br /><span style="font-size:85%;">http://www.uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=256</span></a><em><span style="font-size:85%;"><br />இந்த பதிவை வெளியிட்ட </span></em><a href="http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=4083"><em><span style="font-size:85%;">உயிர்மை - உயிரோசை'க்கு</span></em></a><em><span style="font-size:85%;"> நன்றி.</span></em>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-81763077364047768972011-03-08T08:09:00.000-08:002011-03-08T09:59:21.463-08:00இன்று மகளிர் தினம்!<span style="font-size:85%;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKDh-GwcVtwcGRUCqQ-osy3pi8DRGgvHG4i7kAbgt_Lual9Muo4a-Q-tgGu1FZOAdpe4Bb7yZHBH3xUjOjtlDHvsl9f8wBHU6dWDJm6pe52l_4vjQoeCjVqnRjtdL6F1E2AFwT7TLAQNWu/s1600/womanday+copy.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 210px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKDh-GwcVtwcGRUCqQ-osy3pi8DRGgvHG4i7kAbgt_Lual9Muo4a-Q-tgGu1FZOAdpe4Bb7yZHBH3xUjOjtlDHvsl9f8wBHU6dWDJm6pe52l_4vjQoeCjVqnRjtdL6F1E2AFwT7TLAQNWu/s320/womanday+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5581767341597012290" border="0" /></a>எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இங்கே பெண்கள் தினம் என ஒன்று இருப்பது பரவலாகத் தெரிய வந்தது. அதிலிருந்து அன்றைய தினம் அலைபேசி குறுஞ்செய்திகளும் மின்மடல்களும் அழைப்புகளுமான வாழ்த்துக்களுடனே நன்றாகத் தான் செல்கின்றன. பெண்கள் தினத்திற்கென பிரத்யேக விற்பனைகளும் வந்தாயிற்று. ஆடைகளிலிருந்து கணிப்பொறி வரை. தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், போட்டிகள் என அதற்கும் குறைவில்லை. </span><p style="text-align: justify;"><span style="font-size:85%;">இதுவும் மேலை நாட்டுக் கலாச்சாரம் என கொடி பிடிப்பவர்களும், நம் நாட்டில் என பெண்களுக்கு என்ன மரியாதைக்குறைவு இருக்கிறது ? பிரதான நதியில் இருந்து பிரதம மந்திரியை இயக்குபவர் வரை பெண்கள் தானே என வாதிடுபவர்களும் இன்னமும் என்ன பெண்கள், பெண்கள் பிரச்சனை என்று பேச இருக்கிறது, இப்போது தான் எல்லாத் துறையிலும் வந்துவிட்டார்களே என சலித்துக்கொள்வர்களும் பெண்கள் குறித்தான பிரச்சனைகளின் அலசலை தொலைக்காட்சியில் எப்போதாவது காண நேர்ந்தாலும் உடனே சானலை மாற்றிவிடுபவர்களும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:85%;">ஒரு புறம், சென்ற நூற்றாண்டின் கடைசி பத்து இருபது வருடங்களுடன் ஒப்பிட்டாலே, மிக மிக அசாதரணமான வளர்ச்சியை காணமுடிகிறது பெண்களிடம். இன்னொருபுறம், பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகள் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படுகிறது. ஏனிந்த முரண்பாடு. நடப்பதில் எதை நம்புவது. எந்த செய்தித்தாளையேனும் எடுத்து வாசித்துப்பார்த்தால் எந்த மூலையிலேனும் பெண்கள் சாதித்த கதை தெரியலாம். பரவலாகத் தெரிவது என்ன என சற்றுப் பொறுமையாக புரட்டிப்பார்த்தால், எத்தனை எத்தனை சிக்கல்கள் பெண்ணாய் இருப்பது என்ற ஒரே காரணத்தினால்.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:85%;">இன்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு. கோமாவில் இருக்கும் அறுபது வயதாகும் ஒரு மூதாட்டியை கருணைக்கொலை செய்ய நீதின்றம் மறுப்பு. அதிலென்ன சிக்கல்? நல்ல தீர்ப்பு தானே என யாரும் யோசிக்கும் முன்னரே தொடர்கிறது அவரின் கதை. நர்ஸ்‘ஆக வேலை செய்து வந்த அவர் இருபத்துமூன்று வயதில் ஒரு துப்புரவுத் தொழிலாளியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகினார்.அவர் எதிர்க்கக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டும் இரும்புச் சங்கிலியில் அவர் கழுத்தை நெரித்திருக்கிறான். மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு இத்தனை வருடங்களாக கோமாவில் கழிக்கும் அவரது வாழ்க்கையின் அவலம். கருணைக்கொலை செய்ய விண்ணப்பிக்கும் அளவு சென்றுவிட்ட அவரின் சுற்றுப்புறம். அவர் தொலைத்தது என்ன? இத்தனை வருட வாழ்க்கை. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிஞ்சு பெண் குழந்தைகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்தால், அவர் வருங்காலம் எத்தனைக் கேள்விக்குறியானது எனப்புரியும். மனரீதியாக அவர்களின் பாதிப்புகள் மட்டுமே அதன்பின் அவர்களின் வாழ்க்கைமுறையை பெரிதும் பாதித்துவிடுகின்றன.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:85%;">வெளியே தெரிவது மிகச்சில. யாரும் அறியாமல் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் பலப்பல. யாரும் அறியாமல் சிந்தப்படும் பெண்களின் கண்ணீர்த்துளிகளும் பல கோடி.மேற்கூறிய கடைநிலை வக்கிரங்கள் இல்லாமல், மிகச் சாதரணமாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி தனியே சொல்லவேண்டுமா என்ன ? பொது இடங்களில் உரசும் உடல் ரீதியான செயல்களில் இருந்து மிக நுணுக்கமான உணர்வு ரீதியிலான செயல்கள் வரை, ஒன்றா இரண்டா ?</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:85%;">படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் பொருந்தக்கூடிய சில விஷயங்கள் இவை. எத்தனைப் பெண்கள் “இதெல்லாம் தேவையில்லை உனக்கு” என்ற தன் குடும்பத்தின் கருத்துக்காக தங்கள் ஆசையை கனவுகளை நொறுங்கக்கொடுத்து வந்திருக்கிறார்கள். எத்தனைப் பெண்களின் நட்புவட்டங்கள் கணவனுக்குப் பிறகு காணாமலேயே போய்விடுகின்றன. எத்தனை பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் கூட அநாவசியமாய் அவசியமற்றதாய் ஒதுக்கப்படுகின்றன. பெண்களாய் இருப்பதன் ஒரே காரணத்தினால் இளக்காரமாகப் பார்க்கப்பட்ட தருணங்கள் எத்தனை. அவளை நோக்கி வீசப்படும் கேள்விகள் எத்தனை. துளைக்கும் பார்வைகள் எத்தனை. அத்தனையையும் விட்டுக்கொடுத்து அவர்களையும் புன்னகையுடன் அரவணைத்துச் செல்லும் பெண்கள் எத்தனை பேர்.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:85%;">நேற்றுப்படித்த <a href="http://www.ajayanbala.in/2011/03/blog-post_06.html"><span style="text-decoration: underline;"><span style="color: rgb(0, 0, 255);">அஜயன்பாலாவின் கட்டுரை </span></span></a>ஒன்று மிகப்பாதித்தது. ஆடை விஷயங்களில் இன்னமும் கட்டுப்பாடுகளைச் சந்திக்கும் பெண்களின் மனநிலை. அரைகுறையாய் செல்வது சுதந்திரமா என வாதிக்க நான் இங்கே விரும்பவில்லை. இது அதைப் பற்றினதும் இல்லை. மிகச்சாதாரண ஒரு விஷயத்திற்குக்கூட ஒரு வரைமுறைகளின் கீழ் அடக்கியே வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் மனநிலையிலிருந்து படித்துப் பாருங்கள் புரியும்.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:85%;">குளிரூட்டப்பட்ட எல்லா வசதியும் நிறைந்த ஒரு அலுவலகத்தின் கணினியில் இதனை தட்டச்சுவது மிகச்சுலபமானது தான். அத்தனையையும் அனுபவித்து/ அதையே வாழ்க்கையாகக் கொண்டு/ அதிலிருந்து மீண்டு/ குடும்பத்திற்காக உழைத்து/ அதற்கு மேலும் ஒரு நிலையை அடைந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியான பெருமிதமான பெண்கள் தின வாழ்த்துகள். இன்னமும் நாம் வாழும் சமுதாயம் பெண்களுக்கு என சில புரிதல்களைக் கொள்ளும் பெண்கள் தினமும் வருங்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையோடு.</span></p> <p style="text-align: justify;"><span style="font-size:85%;">வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். உங்கள் வாழ்த்துகளின் பின்னால் உள்ள அன்பும் பெண்கள் மீதான மரியாதையும் வருங்காலத்தை நம்பிக்கையூட்டுவதாய் ஆக்குகின்றன.</span></p><p style="text-align: justify;"><span style="font-size:85%;"><span style="font-style: italic;">வெளியிட்ட <a href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13431:2011-03-08-10-04-34&catid=1:articles&Itemid=264">கீற்று.காம்</a>’க்கு நன்றி.</span><br /></span></p>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-18820117094132515322011-02-12T08:54:00.000-08:002011-03-08T10:00:38.106-08:00காதல் மட்டும் புரிவதில்லை !!! [காதலர் தினப் பதிவு] பகுதி 1<span style="font-size:85%;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo0qJEnVxnjgmlm21-03GiW925QqX3_j7GSDRuLdhNm1lEdGwPyMQAEgAczCBg-Ug1MVT3sJC-wuTzIsE9m9R_LGMNjyxJwSonbliMBTFvxp7wk_uoeNtUK4VLMEnyCKwt9p7q2-Pz36yy/s1600/pair.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 235px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo0qJEnVxnjgmlm21-03GiW925QqX3_j7GSDRuLdhNm1lEdGwPyMQAEgAczCBg-Ug1MVT3sJC-wuTzIsE9m9R_LGMNjyxJwSonbliMBTFvxp7wk_uoeNtUK4VLMEnyCKwt9p7q2-Pz36yy/s320/pair.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5572875842723900562" border="0" /></a></span><span style="font-size:85%;"><br />உலகத்தில் உயிரினங்கள் எத்தனையோ கோடி. ஒவ்வொன்றும் ஒரு வகை ஆனாலும் அத்தனைக்கும் அடித்தளம் காதல். காமத்தின் இறுகியபிடியை மென்மையாய் மாற்றும் மந்திரம். பொங்கி வரும் அன்பின் பிரவாகம். ஹார்மோன்களின் கிளர்ச்சி. அகமோ புறமோ தேவைகளைப் பூர்த்தி செய்யும் வடிகால். தத்தளித்து தவிக்கையில் கிடைக்கும் ஒரு கிளை. இன்னொரு தாய்மடி. அத்தனை உறவுகளின் ஒரே வடிவம். நம்மையே செதுக்கிக்கொள்ள கிடைக்கும் உளி. சிறகடித்து பறக்க ஒரு இறக்கை. ஏறிக்கொண்டே இருக்கும் போதை.<br /><br />பாலையில் விழும் மழைத்துளி. பல வண்ண வானவில். பாளமாய் வெடித்து இருக்கும் நிலத்தில் துளிர்விடும் விதை. தேவதைக் கதைகளின் கொடுக்கப்படும் வரம்.தாய்மையைப் போல் தூய்மையான, தன்னலமற்ற அன்பு படர்ந்து விரியும் வற்றாத காட்டருவி. இரவின் மழை. தவழும் குழந்தையின் நடை பழகல். மழலைச் சிரிப்பில் வடியும் எச்சில். முதல்முறையாய் கடற்கரையைப் பார்ப்பவனின் குதூகலம். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம்.<br /><br />திருடித் தின்ற அடிக்கரும்பின் இனிப்பாய் நாக்கில் தித்திக்கும் கள்ளத்தனமான இனிப்பாய்த் தான் முதலில் ஆரம்பிக்கிறது காதல். காதலிக்கப்படுபவருக்கே கூடத் தெரியாமல்! காதலிப்பவருக்கே உரிய பிரத்யேக அனுபவம் அது. பலப்பல பரிணாமங்களையும் படிமங்களையும் கொண்டு கண்களைக் கட்டிக்கொண்டு புதிர்பாதையில் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம். அதுவரையில் முன் இருந்தவற்றை எல்லாம் ஒரு ஒரத்தில் தூக்கி எறிந்துவிட்டு அது மட்டுமே விஸ்வரூபம் எடுத்து செய்யும் வன்முறை.<br /><br />உறவுகளை வேண்டாதவர்களாக்கி நண்பர்களை தேவையானவர்களாக்கி காதலனை/காதலியை தெய்வம்/தேவதை ஆக்கிடும் ஓர் உன்மத்த நிலை. ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடுதலில், ஒரு ஆறுதலில், ஒரு கைப்பற்றலில், ஒரு ஊடலில்/கூடலில் இன்னொரு பிறப்பைத் தரும் மெய்ஞ்ஞானம். ஒரு கதவிலேயே சொர்க்கத்தையும் நரகத்தையும் காட்டக்கூடிய ஒரு மாயக்கண்ணாடி. மொட்டு ஒன்று மலர்வதின் ரகசியம்.<br /><br />திடீரென வாழ்விற்கு வண்ணம் சேர்க்கும் நிறக்குடுவை. சுவை கூட்டிடும் ஒரு அற்புத நிலை. ரசனைகள் சேர்க்கும் அனுபவம். அழகியல். நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் இயற்கையையும் இசையையும் கலையையும் கூடுதல் அழகாக காட்டும் வண்ணத்திரை.<br /><br />என்ன சொல்லி புரியவைப்பது காதல் என்பது என்ன என்று. வார்த்தைகளில் விளக்க முடியாததொரு பிரபஞ்சத்தின் உணர்வு. அதை நகையாடுபவர்களோ புரியாதவர்களோ, அதை கண்டிப்பாய் அனுபவிக்காதவர்களே!<br /><br />எந்த வகையிலும் குற்றம் சொல்ல முடியாத அடிப்படையான, அத்தகைய தூய்மையான உணர்வை, உறவை இந்த காதலர் தினத்துக்காக மட்டுமே கூறுவதில் உடன்பாடு இல்லையெனினும் இதை ஒரு காரணமாய்க் கொண்டேனும் எழுதுவதில் மகிழ்ச்சியே.<br /><br />இவ்வளவு சொல்லிய பிறகும் கண்களில் விழுந்த மெல்லிய துரும்பாய் உறுத்தும் காதல் என்ற பெயரில் நம்மைச் சுற்றி நடக்கும் கூத்துக்களும் முட்டாள்தனங்களும்.<br /><br />தொடர்கிறேன்.</span>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-68065730758818310942011-01-05T06:16:00.000-08:002011-01-05T10:44:21.154-08:00பாஸ்! நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்! [காரெக்டர்ஸ்]<span style="font-size:85%;">இவர் தாங்க நம்ம இளம் வில்லேஜ் விஞ்ஞானி. கிராமத்துல பொறந்து வளர்ற, 8-12 வயசுக்குள்ள உள்ள ஒரு சின்னப்பையன். படிக்கிறதக்கூட மனப்பாடம் பண்ணாம புரிஞ்சுகிட்டு தனக்கு தெரியுற மாதிரி கொடுக்கிற புள்ள. ஒரு ஆராய்ச்சியாளர் ஆகணும்’கிறது தான் அவர் கனவு ( அது என்ன ஆச்சு’ன்னு கடைசியில பாக்கலாம்) கண்ணுலயே அவ்வளவு கனவையும் கேள்விகளையும் ஆர்வத்தையும் தேக்கி வச்சுருந்த அந்த வயசுல அவர் பண்ணினத எல்லாம் நினைச்சா ஆச்சரியமா இருக்கு. </span><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisPlWQvktHF9dNiybJ3rt5Ge_vX0yeesjOLGEGsU5zt38j0vz-bfUt_dESREEerR6l-dan-wya-hwYCoGGHz1XpmBsroK4m3DX6ZRFV1QWqpAK-OA9bd7OCUuY92Q0iwY1IfZcZrs1nTz0/s1600/Boy_n_cycle_pump_copy.jpg"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5558707413252441442" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 306px; height: 320px;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisPlWQvktHF9dNiybJ3rt5Ge_vX0yeesjOLGEGsU5zt38j0vz-bfUt_dESREEerR6l-dan-wya-hwYCoGGHz1XpmBsroK4m3DX6ZRFV1QWqpAK-OA9bd7OCUuY92Q0iwY1IfZcZrs1nTz0/s320/Boy_n_cycle_pump_copy.jpg" border="0" /></span></a><span style="font-size:85%;">இப்படித்தான் ஒரு தடவ, வீட்டுக்கு பின்னாடி தண்ணி தேங்கி இருந்திருக்கு. அதுல இருந்து கொசுவா கிளம்பிருக்கு. இதப் பாத்த நம்ம இ.வி.வி. யோசிச்சு இருக்காரு. எப்புடி கொசு வருது’ன்னு. சரி தண்ணி இருக்கதால அது மேல வந்திருது. அத சாகடிக்கணும்’னா என்ன பண்ணலான்னு தீவிரமா யோசிச்சதில மண்ணெண்ணெய் தெளிச்சு விடலான்’ற முடிவுக்கு வந்தாரு. அத சும்மா தெளிச்சா நாம எப்புடி விஞ்ஞானி? மறுபடியும் யோசிச்சதுல அண்ணன் செண்ட் பாட்டில் ஞாபகம் வந்திச்சி.அய்ய்! அதுல மண்ணெண்ணெய்ய ஊத்தி சும்மா புஸ்ஸு புஸ்ஸுனு அடிச்சா? செண்ட் பாட்டில உடனெ எடு. மேல மூடிய கழட்டு. மூளை அப்படியே கட்டளைகள் கொடுத்திட்டே இருக்கு. மண்ணெண்னையா ஊத்தியாச்சு. அடிச்சி பாத்தா வரல!! இப்ப என்ன பண்றது..என்னவா இருக்கும்’னு யோசிச்சதுல உள்ள அழுத்தம் பத்தலைன்னு கண்டுக்கிட்டாரு.<br /></span><br /><span style="font-size:85%;">அழுத்தத்திற்கு என்ன பண்ணாலான்னு பாத்தா, சைக்கிள்கடைக்கார மாமா இருக்காரே. அவர்கிட்ட இருந்து காத்தடிக்கிற பம்ப்ப வாங்கிட்டு வந்து காத்தடிச்சா சரியாயிடும்’னு முடிவு பண்ணி, செண்ட் பாட்டில்’ல அழுத்துற மூடிய திறந்து உள்ள இருக்க அந்த சின்ன குழாய்’ல காத்தடிக்க முயற்சி பண்ணினாரு. அடிக்க முடியல. எப்புடி கனெக்ஷன் கொடுக்கிறது? வால்ட்யூப் வைச்சு அடிச்ச உடனே, பாட்டில அழுத்தம் வந்திருச்சு. ஆனா பம்பில அழுத்தம் அதிகமாகி, வால்வு உள்ளாற போயி, மண்ணெண்ணெய் உள்ள போயி க்ரீஸ் எல்லாம் எடுத்திருச்சு. அதுக்கப்புறம் காத்தே அடிக்க முடியல. பம்பு தான் புஸ்ஸு புஸ்ஸு’னுது. அமைதியா போயி அத இருந்த இடத்தில வச்சிட்டு எஸ்கேப்பு ஆகி வந்திட்டாரு. </span><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEQReCexbkMeYLp6X-4ZIygbILLJIPcvnxvXfOI1W8DCPvnuTKzB73EqP5MBmmlovjk9-NEoUj7_Oh01Xh6X9p1k0G4e8iRySaLzh_7xke6We4lf3fjz-wGMK5KXi4ym6ZJ-nbJ2LMRnGa/s1600/Boy_n_glucose_bottle_copy.jpg"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5558707646137359506" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 251px; height: 320px;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEQReCexbkMeYLp6X-4ZIygbILLJIPcvnxvXfOI1W8DCPvnuTKzB73EqP5MBmmlovjk9-NEoUj7_Oh01Xh6X9p1k0G4e8iRySaLzh_7xke6We4lf3fjz-wGMK5KXi4ym6ZJ-nbJ2LMRnGa/s320/Boy_n_glucose_bottle_copy.jpg" border="0" /></span></a><span style="font-size:85%;">அவங்க ஊரில, ஆஸ்பத்திரி’யில இருந்து உபயோகப்படுத்தின சலைன் பாட்டில், அந்த ட்யூப், ஊசி, சிரிஞ்ச், மருந்து பாட்டில் எல்லாம் ஒரு இடத்தில போட்டுருப்பாங்க. அந்த சலைன் பாட்டில் மேல அவருக்கு அவ்வளவு காதல். அத எடுத்திட்டு வந்து, அந்த வட்டத்தை திருகினா எப்படி தண்ணி வேகத்தை கூட்டவும் குறைக்கவும் முடியுது’ன்னு பாத்துக்கிட்டேயிருப்பாரு. அத வச்சு என்ன பண்ணலான்னு யோசிச்சு அவர் கண்டுபுடிச்சது தான் சொட்டு நீர் பாசன முறை. தான் வளர்த்த செடிக்கு பக்கத்துல இருந்து தண்ணி ஊத்த முடியலயே’ன்ற வருத்தத்த தீர்த்துக்கிறதுக்காக, இந்த சலைன் பாட்டில செடிக்கு மேல தொங்கவிட்டு, தண்ணிய சொட்டு சொட்டா இறங்கற மாதிரி பண்ணி விட்டுட்டாரு, பள்ளிகூடத்திலேர்ந்து திரும்பி வர வரைக்கும் தண்ணி கிடைச்சுட்டே இருக்கணுமாம் செடிக்கு!<br /></span><br /><span style="font-size:85%;">இவருக்கு வாங்கிக்கொடுத்த வாட்ச்சும் கடிகாரங்களும் பட்ட பாடு இருக்கே! ஒரு குருவி வெளிய வந்து கத்துமே அந்த கடிகாரம் வாங்கி மாட்டிருந்தாங்க பள்ளிகூடத்துல. அது எப்புடி வெளியே வந்து கத்துது’ன்ன்மு அவரு மண்டைகுள்ள பிறாண்டிக்கிட்டே இருந்திச்சு. இரண்டு மூணு தடவை ஏறி பாக்க முயற்சி செஞ்சப்ப எல்லாம் ஏறும் போதே பிடிபட்டதுனால அந்த கடிகாரம் தப்பிச்சிது. அந்த தாகத்த அவரு தன் கடிகாரங்கள் கிட்டயே தீர்த்துக்க ஆரம்பிச்சாரு. கால்குலேட்டர் வாட்ச்’அ அக்கு வேறா ஆணி வேறா கழட்டி பொட்டலம் கட்டி வச்சிருந்திருக்காப்ல. என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க’ன்னு கேட்டா, அதுல எப்புடி அலாரம் அடிக்குது’னு செக் பண்ணேன்’னு பதில் வந்திருக்கு. இன்னொரு வாட்ச்சு’ல இருந்த ஸ்க்ரூ எல்லாம் இவரு ஆர்வம் தாங்காம கொஞ்ச கொஞ்சமா லூசா ஆகி கழண்டே விழுந்திருக்கு. அத சரி பண்ண ஸ்க்ரூ’வுக்கு பதிலா ஒரு கம்பிய உள்ள செருகி கட்டிட்டு ரொம்ப நாளா அட்சஸ் பண்ணிட்டு இருந்தாரு<br /></span><br /><span style="font-size:85%;">இவரும் இவர் கும்பலும் சும்ம சுத்திட்டு இருந்த் நேரத்தில ஒரு தடவை ஓணான் மாதிரி கொஞ்சம் பெருச்சா ஒண்ணை பாத்து, அத சுருக்கு கயிறு போட்டு எப்டியோ புடிச்சு பள்ளிகூடத்துக்கு எடுத்திட்டு வந்திருக்காங்க. அத சயின்ஸ் வாத்தியார்க்கிட்ட காமிக்கவும், ‘அட, இது உடும்புடா’ன்னு ஆச்சரியப்பட்டு, இத பாடம் பண்ணி வைக்கலாம்’, நம்ம லேப்’லயே. குளோரோபார்ம் குடுத்து மயங்கவைச்சு, 10% ஃபார்மால்டிஹைட் ஊத்தி அதுக்கேத்த மாதிரி பாட்டில்ல போட்டு மூடி வைச்சுடுங்க டா’ன்னு தெரியாத்தனமா பாடம் பண்றத சொல்லிகொடுத்திட்டு போயிட்டாரு, அதுக்கப்புறம் லேப் நிரம்பி வழியுற அளவுக்கு ஓணான், வெட்டுக்கிளி, பச்சோந்தி’ன்னு சிக்குறத எல்லாம் பாடம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மிஞ்சல வீட்ல.</span><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK8630Trq0u4qZkGxIjXId6J2zaW20k0B4TBLmrVQCo0Wz8jMmNOc-G4wDNGZ-rkCXzBuRV52EhexVRLT3j91T1AErpVaafTFHZ3UcZ7CbQPdPBCqDDG1jyQH540K7Jn_KZ1IUogKU1r4T/s1600/Boy_n_flower_pots_copy.jpg"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5558709417746665490" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 320px; height: 264px;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK8630Trq0u4qZkGxIjXId6J2zaW20k0B4TBLmrVQCo0Wz8jMmNOc-G4wDNGZ-rkCXzBuRV52EhexVRLT3j91T1AErpVaafTFHZ3UcZ7CbQPdPBCqDDG1jyQH540K7Jn_KZ1IUogKU1r4T/s320/Boy_n_flower_pots_copy.jpg" border="0" /></span></a><span style="font-size:85%;">இந்த தண்ணித்தொட்டி’ல ஒரு குழாய போட்டு உறிஞ்சி விட்டா இன்னொரு பாத்திரத்துல எடுக்கிறத (பள்ளிக்கூடத்தில Siphon விதி சொல்லிகொடுக்கிறதுக்கு முன்னாடியே) கண்டுபுடிச்சது’ல இருந்து இந்த ஆராய்ச்சிக்கும் ஒரு அளவே இல்லாம இருந்தது. பாத்ரூம்’க்கு மேல ஒரு அண்டா’வ வச்சு அதுல தண்ணிய ஏறி ஏறி ஊத்தி, குளிக்க குளிக்க ஆட்டோமேட்டிக்’கா தண்ணி நிரம்ப வழி பாத்திருக்காரு. தண்ணிய மேல ஏறி ஊத்தி கம்பெனிக்கு கட்டுபடியாகல’ன்றதுனால நேர கிணத்துலயே நீளமான குழாய விட்டு உறியோ உறி’ன்னு உறிஞ்சிருக்காரு. முடியாம மூச்சு திணறுனதுனால அந்த முயற்சி தோல்வியடைஞ்சுது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஒரு நாள் டீச்சர் இங்க் ரிமூவர் பாட்டிலக் கொடுத்து சிலதை அழிச்சு தர சொல்லியிருக்காரு அவரு நோட்ல. அப்ப அதெல்லாம் வாங்கறதுக்கு ரொம்ப அதிகப்படியான விஷயம். நம்ம இங்க் ரப்பர்’ல எச்சியத்தொட்டு வரட்டு வரட்டு’னு அழிச்சு பேப்பரையே கிழிச்சிட்டு இருந்த் காலம். ஆசையா அழிச்சிட்டு இருந்தப்ப தான் அந்த வாசனை அவரை ஏதோ பண்ணிச்சு. ரொம்ப பரிச்சயப்பட்ட வாசனையா இருக்கே’னு ரொம்ப யோசிச்சு, அட, நம்ம ப்ளீச்சிங் பவுடர்’னு பல்பு எரிஞ்சுது. வீட்டுக்குப் போன உடனே ப்ளிச்சிங் பவுடர தேடி எடுத்து கொஞ்சமா தண்ணியில கரைச்சு நோட்டில தொட்டு அழிச்சா, அட, போகுது!! இதான் நம்ம இங்க் ரிமூவரா!! அத கிடைச்ச மருந்து பாட்டில்’ல எல்லாம் அடைச்சு, சாக்பீஸ் டப்பா’ல வச்சு எல்லா க்ளாஸ்’லயும் விக்க ஆரம்பிச்சிட்டாரு. இதுக்கு டெமோ பீஸ் வேற! அழிச்சு அழிச்சு இவர் கையே பொத்து போகுற நிலைமை வந்தத பார்த்திட்டு எல்லாருக்கும் தொட்டு அழிக்க இலவசமா பஞ்சும் கொடுத்தாரு. இந்த விஞ்ஞானிக்குள்ள ஒரு தொழிலதிபரும் இருந்திருக்காரு பாருங்களேன்!</span><br /><br /><span style="font-size:85%;"></span><span style="font-size:85%;">இவ்வளவு ஆர்வக்கோளாறா திரிஞ்ச புள்ள இப்ப என்ன பண்ணுது’ன்னு கேட்டீங்கன்னா, சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகி ராவும் பகலுமா பொட்டியத் தட்டிகிட்டு இருக்காரு. கண்ணுல தூக்க கலக்கமும் மண்டை’ல குழப்பபுமா.</span><br /><br /><span style="font-style: italic;font-size:78%;" >பி.கு : பொருத்தமான ஓவியங்கள் செய்து கொடுத்த <a href="http://meanitha.wordpress.com/"><em>தோழி அனிதா</em> </a></span><span style="font-style: italic;font-size:78%;" >மற்றும் ஏற்பாடு செய்த நண்பருக்கும் நேசங்களும் நன்றிகளும் </span><br /><br /><span style="font-size:85%;"></span>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-88880011496628201082010-11-25T11:02:00.000-08:002010-11-25T11:30:29.708-08:00பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்!<span style="font-size:85%;">Nov 25 - சர்வதேச அளவிலான, பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் இன்று.<br /><br />இது நிச்சயமாக பெண்ணியம் பேசும் பதிவு அல்ல. மனிதம் பேசும், பெண்ணை சக மனுஷியாய் மதிக்க, உலக அளவில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் குறித்த எனது கருத்துக்களையும் பதிய விரும்புகிறேன். அவ்வளவே.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ-W2lzH6bG2kSQquy65xEwfPlGav4vcWPBGFnKZlZWUC2deE-uOvb9jA8wuXNJyWb_wWJH1e1TJGqhji9PCJrDR9EbJm-_SICvuwgFu-1BdHwb8BmHRrd0InmRZQiGh_Td0NTifipjcfs/s1600/collage%25282%2529.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 334px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ-W2lzH6bG2kSQquy65xEwfPlGav4vcWPBGFnKZlZWUC2deE-uOvb9jA8wuXNJyWb_wWJH1e1TJGqhji9PCJrDR9EbJm-_SICvuwgFu-1BdHwb8BmHRrd0InmRZQiGh_Td0NTifipjcfs/s400/collage%25282%2529.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543568095924664402" border="0" /></a><br />எதற்காக இப்படி ஒரு நாள் தேவைபட்டது, அதுவும் உலகம் முழுதான ஒரு பொதுப்பிரச்சனையாக இது காணப்பட்டதன் காரணங்கள் என்ன ? இந்த நாட்டைப் பார் என எங்கேயும் உதாரணம் காட்டமுடியாத நிலை ஏன்?<br /><br />உலகெங்கும் நான்கில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்கிறது புள்ளிவிவரம். இது குறித்தான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையும் UNICEF’ன் அறிக்கையும் அவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க முடியாது. அப்படி என்ன தான் வன்முறை இழைக்கப்படுகிறது என்று பார்த்தால் நம்ம ஊரில் பஸ்ஸில் இடிப்பதிலிருந்து காதலிக்கமறுத்ததால் ஆசிட் ஊற்றுவது வரையான ஈவ் டீஸிங் நடவடிக்கைகள் மட்டுமல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதுமே வன்முறையின் மெல்லிய சுவடுகளாவது படர்ந்திருக்கிறது என திட்டவட்டமாக, பல நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவாக சொல்லப்படுகிறது.<br /><br />பொதுவாக இத்தகைய வன்முறைகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.<br /><br />1. உடலியல் வன்முறை 2. பாலியல் வன்முறை 2. உளவியல் வன்முறை 4. பொருளாதார ரீதியிலான வன்முறை<br /><br />எவ்வகையிலான வன்முறைகளை எந்தெந்த பருவங்களில் அவள் சந்திக்க நேரிடுகிறது என்று நான் பதிவை நீளமாக்க விரும்பவில்லை. விரும்பவர்கள் கூகிளில் தேடவும் அல்லது தனிமடல் இடவும், விரிவான அந்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />எனக்குள் எழுந்த சில கேள்விகளுடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் எளிய மற்றும் மத்திய வர்க்க குடும்பங்களுக்காகவே எழுப்பப்பட்டது போலிருக்கிறது, எனினும் -<br /><br />1. எத்தனை கிராமங்களில் இன்னமும் பெண் சிசுக் கருக்கலைப்பு/பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது? குப்பைத் தொட்டிகளில் கிடைக்கப்பெறும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே இருப்பதன் காரணம் என்ன ?<br /><br />2. எத்தனை குடும்பங்களில் பெண்களை அடிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்? எத்தனை ஆண்கள் கோபத்தில் அவள் அத்தனை முயற்சி எடுத்து சமைத்த உணவுத்தட்டுகளை எறிகின்றனர்? பின் அதை சுத்தம் செய்ய முனைகின்றனர் ?<br /><br />3. இன்னமும் பல மிடில் கிளாஸ் மற்றும் அதற்கு கீழான குடும்பங்களில் ‘பெண்’ என்ற ஒரு காரணத்திற்காகவே பல விஷயங்கள் மறுக்கப்படுவது உண்மையா?<br /><br />4. மிகப்பிரச்சனையான மணவாழ்க்கையில் இருந்துகொண்டு அதிலிருந்து வெளியே வரத்துடிக்கும் பெண்ணிற்கு, அவளின் உடல்/மன உளைச்சல்கள், பிரச்சனை என்னவென ஆராயாமலே ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதையே கொஞ்சம் மாற்றி ‘கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போம்மா’ என்பதையே அறிவுரையாக சொல்லும் சமூகம், சமூக அந்தஸ்து இன்னமும் இருக்கிறதா ?<br /><br />5. எத்தனை ஆண்கள் மனைவியின் விருப்பம் இருப்பின் மட்டுமே கலவுகின்றனர் ?<br /><br />6. எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்? அதில் எவ்வளவு நமக்கு தெரிய வருகிறது ?<br /><br />7. விதவைகளையும் விவாகரத்து ஆனவர்களையும் என்ன மாதிரியான மரியாதையில்/தரத்தில் இந்த சமூகத்தில் வைத்திருக்கிறோம்?<br /><br />8. பெண்களையும் சக மனுசியாய் நினைக்க ஆண்களுக்கு குழந்தையிலிருந்தே கற்பிக்கிறோமா ?<br /><br />9. அவள் 'Weaker Sex'ஆக இருக்கும் ஒரே காரணத்தினால் அவளை துன்புறுத்த தைரியம் வருகிறதா ? வீட்டுக்குள் தன் மனைவியை அடிக்கும், தங்கையை அடக்கும் ஒரு ஆண், ஒரு லோக்கல் தாதாவிடமோ அல்லது ஏதேனும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவார்களா ?<br /><br />10. எத்தனை ஆண்கள் போலீசாகவும் IAS, IPS போன்ற அதிகாரம் நிறைந்த பெண்கள் தங்கள் மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள் ? தங்களை விட அறிவிலும் அழகிலும் அந்தஸ்த்திலும் அதிகாரத்திலும் மேம்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு எந்தவித தாழ்வுமனப்பான்மையோ ஈகோ’வோ இல்லாமல் வாழமுடிந்திருக்கிறதா ?<br /><br />11. என்ன வேண்டுமானலும் செய்துவிட்டு, கோபத்தில் செய்துவிட்டேன் எனவோ, அவளும் அப்படி செய்திருக்கக்கூடாது எனவோ தங்கள் செயலுக்கு வருந்தாமலோ உணராமலோ நியாயம் கற்பிப்போர் எத்தனைப் பேர் ?<br /><br />12. இதையெல்லாம் பற்றி பேசினாலே உண்மையில் அதற்குள்ளிருக்கும் வலிகளையும் வேதனைகளையும் அறியாமல்/ அறியும் விருப்பமும் இல்லாமல்/ அறிந்தும் அறியாதது போலவும் ‘வேற வேலையே இல்ல இவங்களுக்கு’ என்று அலுத்துக்கொண்டு போகிறவர் எத்தனைப் பேர்?<br /><br />நாங்கள் வளர்ந்துவிட்டோம், இதெல்லாம் அந்த காலம் என்று சொல்கிறீர்களா? உங்களை மதிக்கிறேன். ஆனாலும், IT முன்னேற்றம், கல்பனா சாவ்லா, கிரண் பேடி இவர்கள் எல்லாம் காட்டும் உலகத்தினை விடவும், நமக்கென வீட்டுக்குள் ஒரு தனி உலகம் இருக்கிறது. தனி சமுகம் இருக்கிறது. இன்னமும் IT'யோ கல்பனா சாவ்லா’வோ தெரியாத கிராமங்கள் இருக்கின்றன. நான் பெரும்பான்மை’யை முன்வைத்துப் பேசுகிறேன். சிறுபான்மையாக’வாவது இவை எல்லாம் நடப்பதில் மகிழ்ச்சியடைய வேண்டுமா எனவும் புரியவில்லை. தீர்வுக்கான கருத்துக்கள் இருந்தால் பகிருங்கள்.<br /><br /><span style="font-style: italic;font-size:78%;" >டிஸ்கி : இதுக்கு மேலயும், என்னது பெண்களாவது வன்முறையாவது! எந்த காலத்துல இருக்கீங்க நீங்க. IT எவ்வளவோ டெவலப் ஆகியிருக்கு, பெண்கள் என்ன வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்டோ ஒட்டுறது’ல இருந்து விண்கலம் வரைக்கும், 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கோம். இன்னும் என்ன சும்மா பெண்ணியம் பேசிக்கிட்டு’ அப்படி’ன்னு நீங்க கேட்கலாம். தப்பில்லை. அப்படி கேட்டீங்க’ன்னா ஒண்ணு பாவம் உங்களுக்கு விவரம் பத்தலையா இருக்கும், அப்பாவியா இருப்பீங்க. இல்லை’ன்னா நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்’ன்னு விதண்டாவாதம் பேசுற கோஷ்டி. அதுவும் இல்லையா முளச்சு மூனு இல விடல, நீ எல்லாம் என்ன பேச வந்திட்ட, பழம் தின்னு கொட்ட போட்ட நாங்க சொல்றத கேட்டுக்க, புரியுதா’ன்னு ரொம்ப பழக்கமான பாரம்பரிய அடக்குமுறை. அட அதுவும் இல்லையா பரவலா பேச(சாட)ப்படுற ஆணாதிக்க சாயல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கு’னு சொன்னா கோபப்படுவீங்க. அப்படியெல்லாம் இல்ல இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் தரக்குறைவா பாத்ததில்ல நடத்தினதில்லை, பொண்டாட்டியா இருந்தாலும் கைநீட்டி அடிச்சதில்லை. அவ விருப்பமில்லாம தொட்டதில்லை’னு சொல்லுங்க. தெய்வம் நீங்க. இது கண்டிப்பா உங்களுக்கு இல்லை .<br /><br /><br /><br /> <br /></span></span>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-8161238729281769142010-11-21T09:45:00.000-08:002010-11-22T08:53:59.155-08:00ஆப்பி பர்த்டே !!!<span style="font-size:85%;">இன்றும் ஒரு நெருங்கிய நண்பரின் பிறந்தநாளை மறந்துவிட்டேன். வழக்கமானது தான். நாட்களை நினைவில் வைத்துக்கொள்வதில் மிக பலவீனமாகத் தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பியோ சொல்லியோ நான் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். இப்படி மறந்துவிட்டு அசடு வழிகிறேனே என்று என் மேலேயே கோபமாக வந்தது. </span><span style="font-size:85%;">என் பிறந்த நாள் அன்று கண்டிப்பாய் வாழ்த்து சொல்வார்களென்று நினைத்திருந்த சிலர் இதே போல் அடியோடு மறந்த போது எழுந்த லேசான ஏமாற்றமும் நினைவுக்கு வந்தது. </span><br /><span style="font-size:85%;"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeVTPFTJopi3zv7FMKQw14-GkBmg27TPyev2TcWEdfrP0umwmoZRmGEIa9uSlKVM_0cbGlRnKtI8Cz1vuT5vIo9p9SWmhkLNJv-EJ2FgSKiU37G9LPXRkcjEbKk-Bht8ieLnx51Wgzqbb9/s1600/b%2527day+pics.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 383px; height: 239px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeVTPFTJopi3zv7FMKQw14-GkBmg27TPyev2TcWEdfrP0umwmoZRmGEIa9uSlKVM_0cbGlRnKtI8Cz1vuT5vIo9p9SWmhkLNJv-EJ2FgSKiU37G9LPXRkcjEbKk-Bht8ieLnx51Wgzqbb9/s320/b%2527day+pics.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5542078378209173314" border="0" /></a></span><span style="font-size:85%;"><br />ஒரு காலத்தில் பிறந்த நாள் வருவதற்காய் வருடம் முழுதும் காத்திருந்த நினைவுகள் மெல்ல விரிந்தது. தீபாவளிக்கு ஒன்றும் பிறந்த நாளுக்கு ஒன்றுமாய் இரண்டு புதுத்துணிகள் கிடைக்கும் வருடத்திற்கு. மிக முக்கியமான நாட்களில் ஒன்று. அது இல்லாமல் புதுத்துணிக்கேற்ப பாசிகளும் வளையல்களும் கூட, எப்போதாவது செருப்பு போன்ற விஷயங்களும் சேர்ந்துகொள்ளும். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கிடைக்கும் எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டுமே. என்ன வாங்குவது எப்படி வாங்குவது என்ற சிந்தனையிலேயே தூக்கம் கூட சரியாக வராது. எப்படியும் எல்லாம் நான் தேர்ந்தெடுப்பதும் கிடையாது, சமயத்தில் அப்பாவே வாங்கி வந்து விடுவார். அதற்கே இந்த நிலை! </span><p><span style="font-size:85%;">மார்கழி மாதத்தில் வரும் பிறந்தநாள். நினைத்தாலே அதிகாலை குளிரும் தெருக்கோடியில் ஒலிக்கும் கோயில் பாடல்களும் மெல்ல வருடிச்செல்லும். இருள் விலகாத அதிகாலையில் அம்மா எழுப்பும் போதே வாழ்த்துடன் ஆரம்பிக்கும். இதமான வெந்நீரில் தலைக்குக் குளித்து, புதுத்துணியின் வாசம் நெஞ்சம் நிறைய உள்ளிழுத்து அணிந்து, மற்ற புதுசுகளையும் சூடி ஈரப்பின்னல் போட்டு அப்பாவைப் போய் எழுப்பி ‘ஹேப்பி பர்த்டே’ சொல்ல வேண்டும். ஆமாம். அப்பாவுக்கும் எனக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள். அவரிடமிருந்து பதில் வாழ்த்தும் முத்தமும் பெற்ற பின் பெருமிதமும் உற்சாகமும் பீறிட்டு கிளம்ப பள்ளி செல்ல வேண்டியது தான். வகுப்பாசிரியர் வரும் வரை காத்திருக்கமுடியாமல் காத்திருந்து. வந்தவுடன் எழுந்து ஒடி, கையோடு எடுத்து சென்றிருக்கும் சாக்லேட் டப்பாவினை நீட்டி அவரிடமும் வாழ்த்துகள் வாங்கிய பின் முக்கியமான தருணத்துக்குள் அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும்.</span></p> <p><span style="font-size:85%;">எல்லாருக்கும் முன் நிற்க வைத்து ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடுவார்கள். கூச்சமும் சிரிப்பும் சந்தோஷமுமாய் முதல் வரிசையில் தொடங்கி அனைவருக்குமாய் சாக்லேட் விநியோகம் ஆரம்பிக்கும். சிலர் கைகொடுப்பார்கள். சிலர் வாய் வார்த்தையில். சிலர் நன்றியுடன் முடித்து கொள்வர். வெகு சிலர் அதுவும் இல்லாமல் தன் பங்கை மட்டும் எடுத்துகொள்வதும் நடக்கும். இந்த சாக்லேட் விஷயமும் ஒன்றும் சாதரணமானதில்லை. அது தான் அன்று நம் அந்தஸ்த்தின் அடையாளம்! காட்பரீஸ்’இல் இருந்து புளிப்பு மிட்டாய் வரையிலான ரேஞ்சில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் முன்பே தீர்மானிக்க படவேண்டிய ஒன்று. ஒரு மாதிரி நியூட்ரின்‘ஆசை’ யில் வந்து முடியும் நம் தீர்மானம்.(புளிப்பு மிட்டாய்க்கு கொஞ்சம் மேல் :)) அதை சாப்பிட்டபின் சுற்றியிருக்கும் காகிதத்தை ரப்பர் போல இரண்டு பேர் இழுத்து விளையாடலாம். அதையும் ஒரு காரணமாகக் கொண்டு அதையே முடிவு செய்ய மனதை தேற்றிக்கொண்டிருக்கிறேன்.</span></p> <p><span style="font-size:85%;">மாலையில், அப்பா ஏதாவது கேக் வாங்கி வந்திருப்பார். எங்களுக்கே எங்களுக்காய் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஆனால் மிக எளிய ஒரு கொண்டாட்டம். பின்னர் அக்கம்பக்கத்தினர், உறவினர் என்று ஒரு சுற்று நடக்கும். பெரியவர்கள் இருந்தால் காலில் விழுவதில் நம் பணிவுக்கு அளவே இல்லாமல் இருக்கும். கிடைத்ததை வசூல்(!) செய்துகொண்டு கொஞ்ச நாள் குஷியாக ஓடும். இவை இல்லாமல், அன்று பள்ளியிலும் வீட்டிலும் தனி சலுகை கிடைக்கும். எதற்கும் திட்டோ அடியோ விழாது. ஏன் வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறது என வருத்தமும் அடுத்த பிறந்தநாளிற்கான காத்திருப்புமாய் தான் அன்றைய நாள் முடியும்.</span></p> <p><span style="font-size:85%;">எனது ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன் அமைந்தது, அப்பாவின் முதல் சிங்கப்பூர் பயணம். மனதே இல்லாமல் கிளம்பிய அப்பா அங்கே இறங்கியவுடன் அம்மாவுக்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது. புதுத்துணி, சாக்லேட் பற்றி கூட அதில் எழுதியிருப்பார்.! அப்பா அன்று இல்லாத குறை எனக்கு தெரியக்கூடாது என்பதற்காய் நண்பர்கள் சிலர் வந்து கேக் வெட்ட சொல்லி கொண்டாடியது இன்னமும் நினைவு கூரும் நிகழ்வு.. இன்று அவர் இல்லாமல் எத்தனையோ பிறந்தநாட்கள் கழிந்துவிட்டன. எப்படியும் என்னை வந்தடையும் ஒவ்வொரு வாழ்த்திலும் அப்பாவின் புன்னகை நினைவில் நிழலாடுவதை நினைத்துப் பார்க்கிறேன்.<br /></span></p> <p><span style="font-size:85%;">அந்த வயதில் தன் பிறந்தநாளே தெரியாது என சொன்ன சிலரை ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறேன். அதெப்படி பிறந்தநாளே தெரியாமல், பிறகெப்படி கொண்டாடுவீர்கள் என்ற எனது கேள்விக்கு நமக்கென்ன கொண்டாடவேண்டியிருக்கு என அவர்களின் அந்த சலிப்பு புரிவதற்கு பல வருடங்கள் வேண்டியிருக்கிறது. வர வர பிறந்தநாள் வந்தாலே ஒரு வயது ஏறிவிடுகிறது ,இன்னும் என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கிறது என்றெல்லாம் தான் யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கு இன்னிக்கு ’ஆப்பி பர்த்டே’ என்று வாயெல்லாம் பல்லுடன், புதுத்துணியும் வரும் பொடிசுகளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.</span></p> <p><span style="font-size:85%;">இந்த பிறந்தநாளை மறந்த விஷயத்திற்கு வருவோம். எத்தனைப் பேரின் பிறந்தநாளை நினைவு வைத்திருக்கிறேன் என கணக்கெடுத்தால் என் டெபாசிட் காலி. இன்னமும் என் பிறந்தநாளன்று தவறாமல் வாழ்த்தும் மிக நெருங்கிய சிலரின் பிறந்தநாளே தெரியாமல் இருக்கிறேன் என்பது அதைவிடவும் வெட்கக்கேடு. இந்த அவமானத்தோடே இது வரை நான் வாழ்த்தாமல் போன அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்களையும் நேசங்களையும் பரிமாறிக்கொள்கிறேன். என்னை திருத்திகொள்ள முழுமுயற்சி எடுப்பேன் என்றும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்!!! :) :) :)</span></p>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-62842447337362934612010-10-14T11:28:00.000-07:002010-10-14T23:36:43.346-07:00சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!<span style="font-size:85%;">எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.<br /><br />இரண்டாம் உலகப்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTPSrvODmd0gsUf_jKvvniC32JHozOcY9jfACJMJy2a4KTko45m25XfjnNQgP20_SDCTB17GucsbUdjsleKN3HgEM-w8DzKx0GTz1I2wFPkIjZQWaL11guwGUMDh-LlNzjlNcrR_8Sf-kR/s1600/BURMA-THAILAND_RAILWAY__ALLIED_PRISONERS_OF_WAR_ENGAGED_IN_BRIDGE_BUILDING.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5527976160971391554" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 320px; CURSOR: pointer; HEIGHT: 206px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTPSrvODmd0gsUf_jKvvniC32JHozOcY9jfACJMJy2a4KTko45m25XfjnNQgP20_SDCTB17GucsbUdjsleKN3HgEM-w8DzKx0GTz1I2wFPkIjZQWaL11guwGUMDh-LlNzjlNcrR_8Sf-kR/s320/BURMA-THAILAND_RAILWAY__ALLIED_PRISONERS_OF_WAR_ENGAGED_IN_BRIDGE_BUILDING.jpg" border="0" /></a>போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.<br /><br />இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuKE8IaOBhSyEbkh8CgwXbf1ikU5Tx2qVnQ1-aZuGSNeOIG6GM_Sazh7AOYtfwF2dIy0Fgzz6RuagJpU-HkJB4DA0rkOz1G3Eriq6P5O4zboNQGfhzIK68jaQs_d3SLrpm3-9lD5jhfkCM/s1600/photo_thailandrailway.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5527976498342467586" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 333px; CURSOR: pointer; HEIGHT: 242px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuKE8IaOBhSyEbkh8CgwXbf1ikU5Tx2qVnQ1-aZuGSNeOIG6GM_Sazh7AOYtfwF2dIy0Fgzz6RuagJpU-HkJB4DA0rkOz1G3Eriq6P5O4zboNQGfhzIK68jaQs_d3SLrpm3-9lD5jhfkCM/s320/photo_thailandrailway.jpg" border="0" /></a>அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.<br />போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf6tl3qSGZ89bRX-hcFW6EiGfbENIj9iwy7U3puk16KoCvgG1YW4n6QHE4ZuFDw-T2IiRl0XPwnkgJ4wefslhOIHRKjYPa79fNcF-xRF-HMLTzlOx-V-GjzbFjuG2B41C8TCi1uDZ3-h9c/s1600/RAF_aircraft_attack_bridges_on_the_Burma-Siam_railway.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5527976848212355858" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 227px; CURSOR: pointer; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf6tl3qSGZ89bRX-hcFW6EiGfbENIj9iwy7U3puk16KoCvgG1YW4n6QHE4ZuFDw-T2IiRl0XPwnkgJ4wefslhOIHRKjYPa79fNcF-xRF-HMLTzlOx-V-GjzbFjuG2B41C8TCi1uDZ3-h9c/s320/RAF_aircraft_attack_bridges_on_the_Burma-Siam_railway.jpg" border="0" /></a>இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.<br /><br />ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது. அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர். அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..<br /><br />மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான். முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்<br />குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.<br /><br />ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை. இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது. அங்கேயும் சந்தடி சாக்கில்<br />சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9C5dhhhIcjKrbKGFMOzWrEe1QajIlDAQFEjRlmQR_GzCU5xIgSuoMOmPoQvtbtcDRObAeZNsaJ4vPk6IHMkuJgXCw_wgWk19ZUn6_wVcIGRtgmsSUS8np_q71voAnk4uksOSoLMD5IY3q/s1600/Songkurai__Thailand__1943__Building_the_Songkurai_bridge_on_the_Burma-Thailand_railway.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5527977572858157074" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 207px; CURSOR: pointer; HEIGHT: 156px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9C5dhhhIcjKrbKGFMOzWrEe1QajIlDAQFEjRlmQR_GzCU5xIgSuoMOmPoQvtbtcDRObAeZNsaJ4vPk6IHMkuJgXCw_wgWk19ZUn6_wVcIGRtgmsSUS8np_q71voAnk4uksOSoLMD5IY3q/s320/Songkurai__Thailand__1943__Building_the_Songkurai_bridge_on_the_Burma-Thailand_railway.jpg" border="0" /></a>இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள் செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.<br /><br /><span style="FONT-WEIGHT: bold">இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்.</span><br /><br />இப்புத்தகத்தின் விவரம் :<br />சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்<br />ஆசிரியர் : சண்முகம்<br />தமிழோசை பதிப்பகம்,<br />21/8, கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் சாலை, கணபதி, கோயமுத்தூர்-641 012. <br />தொலை பேசி - 9486586388, விலை ரூ 150.<br /><br />இதே பதிப்பகத்தின் சமீபத்திய இன்னுமொரு நூல் -<br />சயாம்-பர்மா மரண ரயில்பாதை மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு - சீ.அருண்; பக்.224; ரூ.130<br /><br />மேல்விவர சுட்டிகள் :<br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Burma_Railway" target="_blank">http://en.wikipedia.org/wiki/Burma_Railway</a><br /><a href="http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm" target="_blank">http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm</a><br /><a href="http://www.cofepow.org.uk/pages/asia_thailand1.html" target="_blank">http://www.cofepow.org.uk/pages/asia_thailand1.html</a><br /><br /></span>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-72140546116382321572010-09-02T22:30:00.000-07:002010-09-03T05:40:06.005-07:00ஆறு வார்த்தைக் கதைகள்நண்பரின் வலைப்பதிவில் பார்க்க நேரிட்ட அவரின் வலைப்பதிவும்(angumingum.wordpress.com), கொடுத்திருந்த <a href="http://www.sixwordstories.net/">இன்னொரு வலைப்பக்கமும்</a> ஆர்வத்தை தூண்டியது. சும்மா முயற்சி செய்து பார்க்கலாமே என்று தான். முயற்சிகள் கீழே.<br /><br /><br /><p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGn9j6Q7ZdLHbDgqLzSo0v-NKNAVJXmfrRL_b2ih8CvR29fkPmz1e9CcJo3F0RFPZ9BO-xhtXUL9BLMa9X0p87DKcFcqtsHWkXKd0mp6pIdmBJ1awURjswPj9jW-4DtVe45ROJSfNUbaXl/s1600/666.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5512556052264568162" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 160px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGn9j6Q7ZdLHbDgqLzSo0v-NKNAVJXmfrRL_b2ih8CvR29fkPmz1e9CcJo3F0RFPZ9BO-xhtXUL9BLMa9X0p87DKcFcqtsHWkXKd0mp6pIdmBJ1awURjswPj9jW-4DtVe45ROJSfNUbaXl/s400/666.JPG" border="0" /></a></p><strong>-0-</strong><br /><br /><strong>இன்றே தேட ஆரம்பிக்கிறேன், நாளை தொலையும் அவளை<br /></strong><br /><strong>-0-</strong><br /><br /><strong>இங்கு தான் இருக்கவேண்டும் அது. இல்லாமலும் இருக்கலாம்.<br /></strong><br /><strong>-0-</strong><br /><br /><strong>எல்லாக் கடனையும் அடைச்சிடலாம்‘னு போனவன் திரும்பியே வரல.</strong><br /><br /><strong>-0-</strong><br /><br /><strong>“பிடிச்சிருக்கா?முடிச்சிரலாமா?<br /><br />அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்.</strong><br /><br /><strong>-0-</strong><br /><br /><strong>பேசலான்னு தான் போனேன். ஆனா அப்படி ஆயிடுச்சு.<br /></strong><br /><strong>-0-</strong><br /><br /><strong>திடீரென விற்பனை அதிகமானது. கலவரம் மூண்டதில் சோடாபாட்டில்கள்.<br /></strong><br /><strong>-0-</strong><br /><br /><strong>“என்ன நடக்குது‘னு பாத்திடலாம்“. லேசாய் கால்கள் உதறியபடி.</strong><br /><br /><strong>-0-<br /></strong><br /><strong>புதையல் சிக்கியது. திறப்பதில் போட்டி. புதைந்தன உடல்கள்.</strong><br /><br /><strong>-0-<br /></strong><br /><strong>உன்னைப் புடிக்கும். ஆனா வேணாம். நண்பர்களாவே இருக்கலாமே..</strong><br /><br /><strong>-0-</strong><br /><br /><strong>மழையில் நனைந்து ஒதுங்கிய ஆளில்லா கொட்டகையில் பின்னர்…</strong><br /><br /><strong>-0-</strong><br /><br /><strong>இன்று இரவு செய்தி கிடைக்கும். அதுவரை காத்திரு.</strong><br /><br /><strong>-0-</strong><br /><br /><strong>பசியில் அழும் குழந்தை. வறுமையில் தாய் தற்கொலை.</strong><br /><br /><strong>-0-</strong><br /><br />ஆங்கிலத்தைப் போல் அல்லாமல் இரு வார்த்தைகள் சேர்த்து எழுதியும் ஒரு வார்தையாக கொடுக்கலாமா தெரியவில்லை. முடிந்தவரை அவற்றையும் தவிர்த்திருக்கிறேன்.<br /><br />கருத்துக்களையும் உங்க கதைகளையும் சொல்லுங்க!குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-91553117136713785742010-05-31T05:00:00.000-07:002010-06-14T22:51:14.042-07:00இன்று World’s No-tobacco day!!!!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ-1VIL7ZFAyaJD16UtbpfDL4pavRIyYVvgqY9NMB2KYRWDtAtNnrtuDfBFKZ9HGkTFIcjVBrwIQs9Of2Kl6R-UPehoPS7RHIBln2jYc5ELr5MpSi5SQkSygEHAX54p4siB9WeGtPxWMlt/s1600/stop-second-hand-smoking-2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5477406640811317970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 209px; CURSOR: hand; HEIGHT: 231px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ-1VIL7ZFAyaJD16UtbpfDL4pavRIyYVvgqY9NMB2KYRWDtAtNnrtuDfBFKZ9HGkTFIcjVBrwIQs9Of2Kl6R-UPehoPS7RHIBln2jYc5ELr5MpSi5SQkSygEHAX54p4siB9WeGtPxWMlt/s400/stop-second-hand-smoking-2.jpg" border="0" /></a><br /><div></div><div>இதனால் -----<br /><br />இதென்ன பெரிய பழக்கமா, நான் எப்ப நினைச்சாலும் விட்டுருவேனாக்கும் என சவடால் பேசித்திரியும் நண்பர்களுக்கும்<br /><br />விட்டுரணும் என்ன பண்றது முடியலயே என வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஃபீலிங்வியாதிகளுக்கும்<br /><br />இதோ அடுத்த மாசத்தோட நான் நிறுத்தறேன் என வரவே வராத அடுத்த மாசத்திற்காய் காத்திருக்கும் ‘எதையுமே ப்ளான் பண்ணி பண்ணுற’ ப்ளானர்களுக்கும்<br /><br />நான் ரொம்ப’லாம் அடிக்கிறதில்ல.. ரெண்டே ரெண்டு தான் (பாக்கெட்டா, சிங்கிளா??)என தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும் மக்களுக்கும்<br /><br />மென்த்தால் ஃப்ளேவர் அடிச்சா எஃபெக்ட்டு கொஞ்சம் கம்மியாமே என மனதைத் தேத்திக் கொள்ளும் அரைமண்டைகளுக்கும்<br /><br />அந்த மெல்லிசா ஒண்ணு வந்திருக்கே அது அடிச்சா பாதி அடிச்ச மாதிரி தானாமே என சந்தோஷப்பட்டுகொள்ளும் அறிவுஜீவிகளுக்கும்<br /><br />செலவழிக்கிறதயும் புகையையும் பாதியா கம்மி பண்றேன்னு பயங்கரமா யோசிச்சு எப்பவுமே எச்சி புகையே அடிக்கிற கூட்டங்களுக்கும்<br /><br />இந்த மாதிரியெல்லாம் இல்லனா நான் அடிக்கவே மாட்டேன் தெரியுமா’னு ஒரேடியா ஃபீலிங்ஸ் உடுற பார்ட்டிகளுக்கும்<br /><br />ஆமா நாங்க புகைக்கிறதால தான் மத்தவங்களும் பாதிக்கப்படுறாங்களா’னு வியாக்கியானம் பேசுற தலைங்களுக்கும்<br /><br />எல்லா விளைவுகள் பத்தியும் தெரிஞ்சிருந்தும் தெரியாத மாதிரியே நடந்துக்கிற அத்தனை பேருக்கும்<br /><br />இன்னிக்கோ சீக்கிரமோ உண்மையாவே மண்டையில உரைக்க<br /><br />தானும் ஆரோக்கியமா இருந்து தன் குடும்பத்தையும் மத்தவங்களையும் ஆரோக்கியமா இருக்க வைக்க<br /><br />மகமாயி அருள் செய்யணும் தாயே!!! </div><br /><div><br /></div><img id="BLOGGER_PHOTO_ID_5477406260782956466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 286px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYYHdgAFGmdcyKhKVVuu_X5tIGMTLc06Pwre2OViML8ffs86hU4t07-1vV4rKRdEakjUs0mEpVYmA5bumJmklc7aQlmzgkAwBX-G3K6mJP-n1k3xI-IEDGgusSHr__HqGdzpx4GMvb6pnW/s400/nosmoke.bmp" border="0" />குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-44210842303634823272010-05-29T12:00:00.001-07:002010-10-08T04:59:36.852-07:00பிரிவாற்றாமை குறள் - ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி :)<p>ஒரே ஒரு குறளை மொழிபெயர்க்க முயற்சி செய்து விட்டு இந்த தலைப்பு கொஞ்சம் அதிகம் தான் :) </p><p>அந்த குறள் -<br /><br />துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை<br />இறைஇறவா நின்ற வளை.<br /><br />- என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே! </p><p>இதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழ் அறியாத நண்பர்களும் படித்து புரிந்துகொள்ள கீழ்க்காணும் ஆங்கில ஆக்கம் கொடுக்கப்பட்டது :) </p><p><a title="photo sharing" href="http://www.flickr.com/photos/karthick/4642508391/"><img style="BORDER-RIGHT: #000000 2px solid; BORDER-TOP: #000000 2px solid; BORDER-LEFT: #000000 2px solid; BORDER-BOTTOM: #000000 2px solid" height="180" alt="" src="http://farm5.static.flickr.com/4059/4642508391_3110935549_m.jpg" width="273" /></a></p><p><a href="http://www.flickr.com/photos/karthick/4642508391/"><span style="font-size:78%;">Awaiting</span></a><span style="font-size:78%;"> Originally uploaded by </span><a href="http://www.flickr.com/photos/karthick"><span style="font-size:78%;">Karthick Makka</span><br /></a><br /><span style="font-size:130%;"><span style="font-family:trebuchet ms;color:#660000;"><strong>Not wanting to show my world<br />the bewildering grief<br />the loneliness of my soul<br />the deterioration of my Mind and body -<br />Yet my bangle drops away<br />Spreading out your absence..<br />The never ending wait taunts<br />Awaiting for you..</strong></span><br /></span><br />யதேச்சையாக ஒரு நாள் ‘miss you'வில் வரும் மிஸ் என்ற வார்த்தைக்கு இணையான ஒரு தமிழ்ச்சொல் என்னவாக இருக்கும் என்று பேச்சு வந்தது...<br />‘பிரிவாற்றாமை’ சரியாக இருக்குமோ என யோசித்துவிட்டு கூகுளிட்டு பார்க்கும் போது திருக்குறளின் ‘பிரிவாற்றாமை’ அதிகாரத்தைக் கடந்து வர நேரிட்டது.. எப்போதோ படித்த நினைவுகள் மங்கலாக.. இருந்தும் இப்போது படித்த போது மயக்குவதாய் இருந்தது... </p><p>சொல்லிவைத்தது போல, நண்பர் ஒருவர் இக்குறளை தன் புகைப்படத்திற்கான வரிகளாய் சில நாட்களுக்கு முன் வலையில் ஏற்றியிருந்தார். அருமையான புகைப்படமும் அதற்கேற்ற வரிகளுமாய் அமைந்திருந்தது அது.. அதைப்பார்த்த மற்ற தமிழ் தெரியாத நண்பர்கள் சிலர் அவ்வரிகளைப் பற்றி கேட்க, ஆங்கிலத்தில் அதன் சாராம்சத்தை கொடுக்கலாமே என எண்ணி முயற்சி செய்தது தான் இது!<br /><br /><span style="font-size:85%;">பி.கு : ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்/சுட்டிகாட்டவும் :)</span><br clear="all"></p>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4423809668256679070.post-91311108356188508662010-04-02T15:47:00.000-07:002010-04-08T12:02:13.778-07:00எனக்கேயான அப்பா!!<p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEII3VTPJNoE9iR9oz-Nht4mUQJdykN_t1VwlSub9EOFFCmLf8UmNgNX-uxSswikrAiBhnVdCKNpHrvyDJ4JNiL1e7oKKr4Zcua9V7H5JjBUCeNbaWLW0OgUijLXziJmf3Z_xR76ER1iwv/s1600/father-and-daughter.jpg"><span style="font-size:85%;color:#000000;"><strong><img style="WIDTH: 194px; HEIGHT: 184px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5455978928087150850" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEII3VTPJNoE9iR9oz-Nht4mUQJdykN_t1VwlSub9EOFFCmLf8UmNgNX-uxSswikrAiBhnVdCKNpHrvyDJ4JNiL1e7oKKr4Zcua9V7H5JjBUCeNbaWLW0OgUijLXziJmf3Z_xR76ER1iwv/s320/father-and-daughter.jpg" /></strong></span></a></p><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>அப்பா...</strong></span></div><div align="left"><strong><span style="font-size:85%;"></span></strong><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>பொதுவாகவே பெண்குழந்தைகளுக்கு அப்பா என்றாலே அலாதிப் பிரியம் தான். அதுவும் என் போன்ற ஓற்றையாய் பிறந்த<br />பெண் குழந்தைகளுக்கு கேட்க வேண்டுமா - அப்பா காட்டும் வழிந்தோடும் பிரியமும் கொடுக்கும் செல்லமுமே போதுமே - கொஞ்சம் கூடுதலாய் பிரியம் செலுத்த... </strong></span></div><div align="left"><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>அப்பா - </strong></span></div><br /><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>ஆறடிக்கும் சிறிது அதிகமான உயரமும் ஒல்லியான தேகமும் முன்புறம் லேசான வழுக்கையும், சுருள் முடியும் அடுக்கி வைக்கப்பட்ட பல்வரிசையும் நல்ல நிறமும் கொண்ட அழகர். அவர் பளீரென்ற வெள்ளை கதர் வேட்டி சட்டையில் ஒரு கையில் வேட்டியின் நுனியை பிடித்துக் கொண்டு இறங்கி நடந்தாரென்றால் எதிரில் வருபவர் ஒரு நிமிடமாவது பார்க்காமல் போக முடியாது..இன்றும் அப்பா தெருவில் போகும் அழகினைப் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று சொல்லும் அதே தெருவில் வசிக்கும் சினேகிதிகளின் அம்மாக்களாவது(?!!) அப்பாக்களாவது சில நேரம் சொல்லும் போது மிகப் பெருமையாய் இருக்கும் எனக்கு.. </div></strong></span><span style="font-size:85%;color:#000000;"><strong><p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy9__-wmq6Gsv01DJfQbi3d3_1ENjSwr8qw1e-0dmWiEts9JfEmzO-wFVz7j4Cb_zt8sHwidHTj4uPQihiJ2oQTxxg3ygYqhYkBw6by6ry_WYIgjmFmQBUXVx5YEUWTgXnlPzsGr_q-KHI/s1600/seetha+appa+edited.jpg"><img style="WIDTH: 320px; HEIGHT: 306px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5456355388645797906" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy9__-wmq6Gsv01DJfQbi3d3_1ENjSwr8qw1e-0dmWiEts9JfEmzO-wFVz7j4Cb_zt8sHwidHTj4uPQihiJ2oQTxxg3ygYqhYkBw6by6ry_WYIgjmFmQBUXVx5YEUWTgXnlPzsGr_q-KHI/s320/seetha+appa+edited.jpg" /></a></strong></span></p><div align="left"><strong><span style="font-size:85%;"></span></strong></div><div align="left"></div><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>அப்பா - </strong></span></div><span style="font-size:85%;color:#000000;"><strong></strong></span><br /><span style="font-size:85%;color:#000000;"><strong></strong></span><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>நான் பிறந்த நிமிடத்தில் என்னை ஏந்திய போது, தன் தாயே மறுபடி பிறந்திருப்பதாய் நினைத்து மகிழ்ந்த அப்பா... </strong></span><br /><br /><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>சில மாதங்களில் அம்மை நோய் கண்டு கண்களெல்லாம் சொருகிப்போய் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் சேர்த்து, அவசரத்தில் எதுவும் எடுத்து வராததில், குழந்தையைக்(என்னை) கிடத்த தன் வேட்டியில்<br />பாதியைக் கிழித்து கொடுத்துச் சென்ற அப்பா... </strong></span></div><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>உயிருடன் ஒரு நாலு நாள் தான் தாக்குப்பிடிப்பேன் என்று மருத்துவர்கள் கையை விரித்துவிட்ட நிலையில், எதையோ எடுப்பதற்காக வீட்டுக்குச் சென்று வெறுமையாய் இருந்த தொட்டிலைப் பார்த்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சமாதானப்படுத்தும் அளவிற்கு, வெடித்து கேவிய அப்பா... </strong></span><br /><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>பின்னாளில் ஏதும் துடுக்காக நான் எதிர்த்து பேசும் போதெல்லாம் - ”நாய்க்குட்டி, பேச மாட்ட, உன்னையெல்லாம் பொழக்க வச்சி இப்டி வளத்துக் கொண்டுவந்திருக்கம்ல” என்று சிரித்துக் கொள்ளும் அப்பா.. </strong></span><br /><div align="left"><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>பல்கெட்டுப் போய்விடும் என்று அம்மா சாக்லேட் மட்டும் வாங்கித்தராததினால், சாக்லேட் தவிர வேறு எதுவும் வாங்கித்தராதது மட்டுமில்லாமல், பெரிய சாக்லேட் பாரினை வாங்கிக்கொடுத்து விட்டு“அம்மா வரதுக்குள்ள சீக்கிரமா சாப்டுரு” என்று அவசரப்படுத்தும் அப்பா..... </strong></span></div><br /><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>பள்ளித் தேர்வு முடிவுகள் வருட விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, அப்பா வரும் வரை காத்திருந்து அந்த கவரை நீட்டும் போது, கவரைப் பிரித்துக் கூட பார்க்காமல், புன்னகையுடன் கன்னம் கிள்ளி முத்தமிடும் அப்பா... </strong></span></div><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும் போது, கருத்தரங்கம் ஒன்றிற்காய் தான் வெளியூர் செல்ல நேரிட்ட போது அங்கிருந்து என்ன வேண்டும் என்று என்னைக் கேட்ட போது, அப்போது தான் :பேரி டேல்ஸ் படிக்க ஆரம்பித்திருந்த கிறக்கத்தில் “ஏதாவது புக்ஸ் வாங்கிட்டு வாங்கப்பா” என்று நான் முதல்முறையாய் கேட்டதை எதிர்பாராமல், முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அம்மாவைப் பார்த்து “பார்த்தியா, எம் புள்ள என்ன மாதிரியே” என்று சிலாகித்த அப்பா...</strong></span><br /><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>தான் கல்லுரி நாட்களில் மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றதை எனக்கு அடிக்கடி ஞாபகபடுத்திக் கொண்டு, எனக்கு செஸ் விளையாட்டு சொல்லி கொடுத்து, சில நாட்களில் அடிக்கடி நாங்கள் விளையாட ஆரம்பிக்க, அவரை நான் தோற்கடித்த முதல் விளையாட்டில், தான் தோற்றுவிட்டோம் என்று தெரிந்த அந்த நிமிடத்தில் கண்களில் பெருமிதம் பொங்க, கட்டியணைத்த<br />அப்பா... </strong></span><br /><span style="font-size:85%;color:#000000;"><strong></strong></span><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>எப்போதும் பள்ளிக்குச் செல்லும் போது நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவரை லேசாய் தட்டி எழுப்பி சொல்லிவிட்டு கிளம்பும் போதெல்லாம் பாதி கண்கள் திறந்து கன்னம் தடவி முத்தமிட்டு வழியனுப்பும் அப்பா... </strong></span><br /><br /><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>அப்படிதான் ஒரு நாள் ஏதோ அவசரத்தில் சொல்லாமல் நான் கிளம்பிவிட, திடும்மென இடைவேளையில் பள்ளிக்கு வந்து நின்று, “அப்பாகிட்ட சொல்லாமயே வந்திட்டல” என்ற அப்பா... சும்மா வராமல் வகுப்பில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் படியாய் ஒரு சாக்லேட் கவருடன்..அனைவருடனும் அதை பகிர்ந்து கொள்ளும் போது திடீரென எதுக்கு சாக்லேட் என எழுந்த கேள்விகளுக்கு சும்மா தான் என சொன்னாலும் அதன் பின் இருந்த ஒரு பத்து வயது சிறுமிக்கான அந்த<br />மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வார்த்தைகளில் உணர்த்த முடியுமா எனத் தெரியவில்லை... </strong></span></div><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>ஏம்ப்பா நான் குள்ளமாவே இருக்கேன், உங்கள மாதிரி வந்திருக்கலாம்ல என வருத்தப்படும் போதெல்லாம், அப்பா திடீர்னு தான் வளந்தேன்டா பதினஞ்சு வயசுக்கு மேல, நீயும் அதே மாதிரி வளந்திடுவ பாரு’ன்னு ஆறுதலுக்காய் சொல்லும் அப்பா.. </strong></span><br /><br /><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>ஒரு காலகட்டங்களில், தோழர்களைப் போல் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் பொழுதுகளில் நண்பர்களுடனான தன் சாகசங்களையும் தன் காதல் கதைகளையும் சிலாகித்து விவரிக்கும் அப்பா... நான் செத்தா இவங்க எல்லார்க்கும் சொல்லியனுப்பனும்’ன என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் அப்பா...</strong></span></div><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>‘மெய்பொருள் காண்பது’ எவ்வளவு முக்கியமென உணர்த்திக்கொண்டே இருக்கும் அப்பா.. எனது எவ்வளவோ மூடப்பழக்கங்களைத் தகர்த்தெறிந்த அப்பா... </strong></span><br /><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>பெரிதாக வருமானங்களோ, வசதிகளோ இல்லாத நிலையிலும் மன்னரைப் போல, பாரதியைப் போல கனவுகளில் பெரிதாய் வாழ்ந்த அப்பா... </strong></span><br /><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong></strong></span></div><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>பக்கவாதம் வந்து அவரை மொத்தமாய் உருக்குலைத்து கட்டிப்போட்ட போதும் மனதளவில் நிமிர்ந்து நின்ற அப்பா..தன் தன்னம்பிக்கையையோ, தன்மானத்தையோ ஒரு போதும் தளரவிட்டதில்லை அவர்... </strong></span></div><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>திடீரென உடல் நிலை சிறிது மோசமாகி பக்கத்தில் இருந்த ஒரு சின்ன நர்சிங் ஹோம்’ல் சேர்க்க, அன்றிரவு முழுதும் வைத்திருந்து அடுத்த நாள் காலை ஜீ.எச்’க்கு கொண்டு போக சொல்லிவிட, என்னை பார்க்க வேண்டுமென்று அழைத்து, கையைப் பிடித்துக் கொண்டு ‘நல்லா படிக்கணும்’ன, அம்மாவ ரொம்ப தொந்தரவு செய்யக்கூடாது’ என எனக்கான கடைசி வாக்கியம் பேசிய அப்பா.... </strong></span><br /><span style="font-size:85%;color:#000000;"><strong></strong></span><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>ஜீ.எச்’சில் சேர்த்த அன்றிரவு தன் உயிர் போகும் முன், அருகில் இருந்த சித்தப்பாவிடம், ‘புள்ளயப் பாத்துக்கடா’ என்பதையே அனைவருக்குமான கடைசி வாக்கியமாய் விட்டுச் சென்ற அப்பா... </strong></span><br /><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>இன்று நானிருக்கும் மனுஷியாய் என்னை செதுக்கிய அப்பா...இப்படி நான் இருப்பதை பார்க்காமலே சென்று விட்ட அப்பா... </strong></span><br /><br /><div align="left"><span style="font-size:85%;color:#000000;"><strong>அப்பா...அப்பா..அப்பா.....இன்னமும் எழுத எழுத வந்து கொண்டேயிருக்கும் நினைவுகளைத் தந்து சென்ற அப்பா... </strong></span></div><br /><span style="font-size:85%;color:#000000;"><strong>எந்நேரத்திலும் எனக்குள் இருந்த அவருக்கான பிரியத்தை - அது அவரால் உணர்ந்துக் கொள்ளப்பட்டது தான் என்றாலும், பெரிதாக வெளிக்காட்ட முடியாமலே தான் போயிருக்கிறது இன்று வரை.....இங்கு நான் நினைவு கூர்ந்த விஷயங்கள் அனைத்தும், பிரியமான அப்பாவைக் கொண்ட அனைவராலும் உணரப்பட்ட, அறியப்பட்ட விஷயங்களாக இருந்திருக்கக்கூடும். எனினும் அப்பாவுக்கான எனது அன்பின் ஒரு வெளிக்காட்டலாகவும் அவரிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட அனைத்திற்கும் நெகிழ்ச்சியான ஒரு நன்றியாகவும் அவரின் இந்த 14’ஆம் வருட நினைவு நாளில், இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன். </strong></span>குட்டிப்பையா|Kutipaiyahttp://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.com32