அடுத்த நாள் அதற்கான பதில் வந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பேருந்தில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தேன். அருமையான பதிவு என்றும் ரசித்ததாகவும் சொல்லிய எனது சான்டா, "உனக்கு அப்பாவின் நினைவு வந்திருக்கும். அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறாய் அல்லவா ? ஒரு கற்பனை போன் கால் ஒன்று செய்து ஷேர் செய்யேன், அவரிடம் இப்போது என்ன சொல்வாய் ? Hope it is not too heavy." என கேட்டிருந்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே தொண்டையை அடைத்தது. ஜன்னலை திறந்து வைத்தேன். காற்றுப்பட்டது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. மறுமுறை அதை படித்தேன். கடகட வென கண்ணீர் துளிகள் உருண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக நான் என்னை கொஞ்சம் மனவலிமையான ஆளாக கருதிக்கொள்வதுண்டு. சட்டென அழுகை, அதுவும் பொதுவெளியில் மிகவும் கடினம் தான். இருபது வருடமாகிவிட்டதே, பழகிவிட்டது என நினைத்திருந்தேனே. ஆனால் இன்று, எது என்னை இப்படி அழ வைக்கிறது ?
யோசிக்கிறேன். என்ன பேசுவேன் அப்பாவிடம்? என்னவென்று அவ்வுரையாடலை ஆரம்பிக்க? நல்லா இருக்கீங்களா அப்பா என்றா ? இருபது வருடங்களின் கதையை, கண்ணீரை, வலியை, வெற்றிகளை, சந்தோஷங்களை, என்னவென்று மொழிபெயர்ப்பேன் ? ஒரு உறுதுணை, ஒரு தூண், கை பிடிக்கும் விரல், சாய்ந்து கொள்ளும் தோள், அழுகை அமர்த்தும் மடி - வேண்டிய பொழுதுகளில் அவை இல்லாமல் இருந்த வெறுமையை எப்படி சொல்வேன்? நினைக்க நினைக்க நிற்காமல் ஒடும் கண்ணீரை மீறி என்ன பேசிவிட முடியும் என்னால் ? இல்லை, இது என்னால் முடியாது. இதை செய்ய என்னால் முடியாது. அப்பா திரும்பி வரப்போவதேயில்லை என்பதானாலேயே என்னால் முடியாது. மன்னித்து விடு சான்டா என பதில் அனுப்பிவிட்டு தொடர்ந்து யோசித்து கொண்டிருந்தேன்.
காயத்தை காலம் ஆற்றிவிட்டதென நினைத்ததை, மனதை அறுப்பதாக அல்லாமால், இயல்பான ஒரு கவலையாக மனதின் அடியில் படிந்துவிட்டதை, ஒரு வார்த்தை, ஒரு கற்பனை, அன்று இருந்தது போலவே அவ்வலியை திருப்பி கொண்டுவர முடியுமா ? இங்கே அழுது கொண்டிருப்பது இப்பொது இருக்கும் நானல்ல, அன்றிருந்த பதினான்கு வயது சிறுமி அல்லவா? ஒரு காயம் என்றும் மறைவதில்லை. உறுத்தாமல் ஓரமாக இருக்க பழகிக்கொண்டிருக்கும். மேலே ஆறியது என நீங்கள் நினைத்தாலும் எத்தனை வருடங்களுக்கு பிறகும் கொஞ்சம் தட்டிப்பார்த்தால், அதே ரத்தமும் சதையுமான காயம்.தான். எக்காயத்தையும் காலம் ஆற்றும் என்பது உண்மை அல்ல. பழக்கப்படுத்தும் என்பதே உண்மை. ஒரு இழப்பின் வலி என்றும் மறைவதேயில்லை
2 comments:
தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!
தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!
தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!
உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை
நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 33 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்
33ஆவது வலைத்தளம்: என் மன வெளியில்!
34ஆவது வலைத்தளம்: மறந்து போகாத சில
35ஆவது வலைத்தளம்: பிச்சைப் பாத்திரம்
அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.
இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்
ஒரே பார்வையில் எமது தளங்கள்:
1. வலை ஓலை
2. எழுத்தாணி
3. சொல்
தங்கள் பதிவு - எமது திரட்டியில்: வலை ஓலை
முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் நன்றி!
-வலை ஓலை
மீண்டும் எழுத வாருங்கள்.
Post a Comment